STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

5  

Dr.Padmini Kumar

Classics

நான் நானாக வாழ்வேன்

நான் நானாக வாழ்வேன்

1 min
456

நான் நானாக வாழ்வேன்

பத்மினி ஆகிய

நான் நானாக வாழ்வேன்

அம்மா அப்பா பெண்ணாக

அண்ணன் அக்கா தங்கையாக

தங்கை தம்பியின் அக்காவாக

 உறவுகளின் உறவாக

எண்ணற்ற எண்ணங்களுடன்

இல்லத்தில் சுற்றி வந்த போதும்

நான் நானாக வாழ்வேன்


பள்ளி மாணவியாக

பருவமங்கை தோழியாக

கன்னி மலர் கொய்ய வந்த

கணவனுக்கு மனைவியாக

அத்தை மாமாவிற்கு மருமகளாக

 ஓரகத்தி இருந்தாலும் ஓர்ப்படி இருந்தாலும்

 கொழுந்தன் இருந்தாலும்

கொண்டாரின் அண்ணன் இருந்தாலும்

ஒப்பற்ற புக்ககத்தில் ஒன்றியே வாழ்ந்தாலும்

நான் நானாக வாழ்வேன்.


 தாய்க்குத் தலைமகன் எனத்

தன் மகன் கண்டாலும்

மற்றோர் மகன் கண்டு மனமகிழ்ந்து நின்றாலும்

ஆசைக்கோர் பெண்ணென

மகளை அணைத்து மகிழ்ந்தாலும்

 தாய்மை உணர்வோடு

தரணியை ஆண்டாலும்

பத்மினி ஆகிய நான்

நான் நானாக வாழ்வேன்.


 பட்டங்கள் பல பெற்றாலும்

பணிகள் பல செய்தாலும்

பயணங்கள் பல செய்து

பார் சுற்றி வந்தாலும்

எட்டு திசை எங்கும்

 என் நினைவுகள் செல்ல

எல்லாம் வல்ல இறைவன்

என் உயிர் காத்தாலும்

என் பெயர் கொண்டு

நான் நானாக வாழ்வேன்.



Rate this content
Log in

Similar tamil poem from Classics