அம்மா
அம்மா
வெள்ளென எழுந்திடுவாள்; வாசல் தெளித்து கோலமிடுவாள்; பாத்திரங்கள் துலக்கியதும் பால் காய்ச்சிடுவாள்; பரீட்சைக்கு படிக்க என்று
பிள்ளைகளை எழுப்பி விட்டு காபி கலந்து கொடுத்திடுவாள்;
தண்ணீர் தொட்டி நிரப்பிடுவாள்;
தலைக்குக் குளிக்கச் செய்வாள் ;
துணிகளையும் துவைத்து மாடியில் உலர்த்திடுவாள்; காலை டிபன் வேலை முடித்து,
செல்ல பெண்களை பின்னல் இட்டு, பூ முடித்து, பள்ளிக்கு அனுப்பி வைப்பாள்.
இவள்..... என் அம்மா... சாத்தூரிலே பிறந்தாள்... சிவகாசியில் புகுந்தாள் .
பத்து மக்களைப் பெற்ற மகராசி!
இவளை..
அம்மாவாக அடைய...
என்ன தவம் செய்தேனோ!
