STORYMIRROR

Ganesan N

Abstract Classics Inspirational

4  

Ganesan N

Abstract Classics Inspirational

புரட்டாசி

புரட்டாசி

1 min
322



புரட்டாசி மாதம் முழுமைக்கும்

அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள்

அது ஒவ்வொரு வருடமும்

புரட்டாசி விரதமாய் அனுஷ்டிக்கிறார்கள்

அது கடவுளுக்கான

விரதம் என்கிறார்கள்

அது அவர்களுக்கான

விரதமாகப் பார்க்க மறுக்கிறார்கள்

விரதம் என்பது

உடல் ஆரோக்கியத்திற்கான

நோன்பு

கடவுள் என்பவர்

உண்பவர் அல்ல

விரதம் இருப்பவர் அல்ல

பசியற்ற நிர்க்குணம் படைத்தவர்

பசியுள்ளவர்களுக்கு

எல்லாம் படைத்தளிப்பவர்

எந்த நெய்வேத்தியமும் ருசி பார்த்து உண்பவர் அல்ல அவர்

மனிதன் மூன்றுவேளை

தவறாமல் உண்கிறான்

ஒரு வேளை தின்பவன் யோகி

இருவேளை தின்பவன் போகி

மூன்றுவேளை தின்பவன் ரோகி

நாம் ஒவ்வொருவரும்

நினைத்துப் பார்க்க வேண்டும்

அந்த மூன்றில்

நாம் எந்த பிரிவில்

உள்ளடங்கி இருக்கிறோம்?












Rate this content
Log in

Similar tamil poem from Abstract