மழை
மழை
இயற்கையின் கண்ணீர் அல்ல
மழை மேகங்களின் சேமிப்பு நீர்
தன் சேமிப்பு மிகுதியை
பூமிக்கு மழையென அனுப்பி
சேவை புரிகிறது பருவகாலங்களில்
மழைக்கு பலப்பலப் பெயர்கள்
தூறல்மழை சாரல் மழை
அடைமழை புயல் மழையென
எந்தவொரு மழையாயினும்
அது தன்பணியை நிறைவேற்றி
வெளியேறி விடுகிறது
சிலகாலம் ஓய்வுக்கு பிறகு
மீண்டும் பருவகாலம் தொடங்கி
பூமியில் இறங்கி மண் குளிர
நீர்நிலைகள் நிரம்ப வைத்து
திருப்தியடைகிறது பூரணமாய்
மழைக்கு எப்பொழுது சிரிப்பு
மழைக்கு எப்பொழுது கோபம்
மழைக்கு எப்பொழுது சீற்றம்
வருமென எவருக்கும் தெரியாது?
மழை மனிதனின் எதிர்ப்பார்ப்பு
மழை மனிதனின் பிழைப்புக்கான
உயிர் நீர்
மழையை எப்பொழுதும்
மனிதன் போற்றுகிறான்
மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்
மா மழைப் போற்றுதும்...!!