மாற்றம் வரும் நிர்பயா
மாற்றம் வரும் நிர்பயா
அடக்க ஒடுக்கத்தை கற்றுக்கொடுங்கள் ஆண்பிள்ளைக்கும் சேர்த்தே...
ஏன் நம்பி போனாய் என்று கேட்காதீர்கள்
நம்பியவளை ஏன் சீரழித்தாய் என்று கேழுங்கள்...
ஆடைதான் காரணமென்றால்
பிஞ்சுக்குழந்தைகளுக்கு ஏன் இந்த நிலை...
பார்க்கும் பார்வையில் உள்ளது வக்கிரம்
ஆடையிலோ அவள் பேச்சிலோ இல்லை...
சாக்கடை நாற்றமெடுத்தால்
அகற்ற வேண்டியது சாக்கடைகளையே தவிற
அங்கு இருக்கும் பூச்செடிகளை அல்ல...
குற்றவாளியை எதிர்க்கிறேன் என்று
அவன் வீட்டு பெண்களை அவதூறாக பேசுவோர்
அவனிலும் கீழ் மக்களே...
விவசாயியை தற்கொலைக்கு துரத்தும் வங்கிகளின் முயற்சியைக் கூட
வக்கிர எண்ணம் கொண்ட
ஆறரிவு மிருகத்திற்கு தண்டனை வழங்க எடுப்பதில்லை நீதி மன்றங்கள்...
மற்றும் ஒரு நிர்பயா வேண்டாமெனில்
குற்றவாளியை ஹீரோ ஆக்கும் ஊடகம் மாற வேண்டும்...
பாதிக்கப்பட்டோரை
பாவமென பார்க்கும் நிலை மாறி
உனக்கு வந்த நோய் குணமாயிற்று என தேற்றும் நல்ல சமுதாயம் வேண்டும்...