STORYMIRROR

mariappan velayutham

Abstract

5.0  

mariappan velayutham

Abstract

புத்தரின் புன்னகை

புத்தரின் புன்னகை

1 min
565


                                

                                               

எங்கோ எதுவோ யாருக்கோ

காத்துக்கிடந்தது என்று

அங்கே அதற்கா

ய் எனக்காக

பயணம் தொடங்கினேன்

ஓர் ஏகாந்த முழுநிலா இரவில்

வழக்கமாய் அமைதிகாக்கும் நாய்கள்

குரைத்தன மாறிய என்நோக்கம் கண்டு

நாய்களின் ஆசிர்வாதங்களும், சாரல்மழையும்

என் தனிமைமுழுவதும் ஈரமாக்கின

சாலைகள் மலைப்பாம்புகளாய் நீண்டன

காடுகள் வெறுமையின் ஆடைகளாய் விரிந்தன

ஒற்றை இரவு கற்றை இரவுகளாய் அகண்டது

யுகங்களின் கரைசலில் உப்பானது தேகம்

தேடிவந்தது எதுவென என்னைக் கேட்டேன்

மெளனம் எதிரொலித்தது; உருகி உருகி

கண்ணீர்க்குவியலாய் விழுந்து கிடந்தேன்,

கண்ணீரில் ஜொலித்தது புத்தனின் புன்னகை


Rate this content
Log in

Similar tamil poem from Abstract