புத்தரின் புன்னகை
புத்தரின் புன்னகை


எங்கோ எதுவோ யாருக்கோ
காத்துக்கிடந்தது என்று
அங்கே அதற்கா
ய் எனக்காக
பயணம் தொடங்கினேன்
ஓர் ஏகாந்த முழுநிலா இரவில்
வழக்கமாய் அமைதிகாக்கும் நாய்கள்
குரைத்தன மாறிய என்நோக்கம் கண்டு
நாய்களின் ஆசிர்வாதங்களும், சாரல்மழையும்
என் தனிமைமுழுவதும் ஈரமாக்கின
சாலைகள் மலைப்பாம்புகளாய் நீண்டன
காடுகள் வெறுமையின் ஆடைகளாய் விரிந்தன
ஒற்றை இரவு கற்றை இரவுகளாய் அகண்டது
யுகங்களின் கரைசலில் உப்பானது தேகம்
தேடிவந்தது எதுவென என்னைக் கேட்டேன்
மெளனம் எதிரொலித்தது; உருகி உருகி
கண்ணீர்க்குவியலாய் விழுந்து கிடந்தேன்,
கண்ணீரில் ஜொலித்தது புத்தனின் புன்னகை