தாமிரபரணி..
தாமிரபரணி..
பொதிகையின் சிரசினில் பிறந்து
அழகுற தவழ்ந்து, பொங்கி எழுந்து
சோலையிடை விரைந்து சீறி பாய்ந்து
தென்றல் தழுவி குளிர்ந்து தாவிக்குதித்து
திருக்குற்றாலத்தில் அருவியாய் விழுந்து
நெல்லையம்பதியை அமைதியாய் கடந்து
வெண்மணல் மடியில் விளையாடி படர்ந்தோடி
நவதிருப்பதிகளின் நடுவே பாய்ந்தோடி
தெய்வீகப் பெருமையோடு அசைந்தாடி
இராமனின் பாதம் பதிந்த பெருமை மிகுந்த
சீர்மிகு சிற்றூர் குரங்கணி அழகுற வளைந்து
முத்துமாலை அன்னையின் ஆலயம் தழுவி
செல்லும் வழியெங்கும் எவ்வொரு பேதமுமின்றி
பல்லுயிர்களின் தாகம் தணித்து பசி போக்கி
ஆடிமகிழ்ந்து வங்கக்கடலின் அலைகளோடு
கூடிப்பிணைந்து சங்கமிக்கும் தாமிரபரணிக்கு
பொருநை ஆறென்று மற்றொரு பெயருமுண்டு..
தென்தமிழகத்தையே செழிப்பாக்கி உயிர்காக்கும்.
ஈடிணையில்லாத வற்றாத அன்னை பொருநையின்
பெருமை பேச எமதன்னை தமிழ் மொழியால்
மட்டுமே சத்தியமாய் சாத்தியமாகும்..
வரலாற்றில் எழுதப்படாமல் விடுபட்டுப்போன
பல்லாயிரமாண்டுகளுக்கும் முற்பட்ட முற்போக்கு
பண்டைத்தமிழர் நாகரிகச் சுவடுகள் புதையலாய்
நிறைந்து கிடக்கும் ஆதிச்சநல்லூரும் சிவகளையும்..
பாண்டியமன்னனின் கொற்கைத்துறைமுகமும்
இருமருங்கும் அழகுசெய் அணிகலனாய் அணிந்த
எமதன்னை தாமிரபரணியின் தண்ணீரை
இரண்டாம் தாய்ப்பாலாய் அருந்தி வளர்ந்து
இன்றும் பெருமையோடு உலகெங்கும் வாழுகின்ற
மேன்மையான பெரும்பான்மை இந்துக்களும்,
தமிழ் பேசும் இஸ்லாமிய தமிழர்களும்
எங்கும் கலந்துள்ள தமிழின கிறுத்துவர்களும்
கலந்து உறவாடி ஒருதாய் பிள்ளைகளாய் வாழ்ந்து
செல்லுமிடமெல்லாம் நெல்லைத்தமிழில் மண்ணின்
பெருமை பேசுதல் பொருநையின் பெருமையே..
இரா.பெரியசாமி..
எங்கள் வாழ்வோடு கலந்து போன
பனை மரங்களின் பெருமையை எங்ஙனம் பட்டயலிட?? எம்முன்னோர்கள் குடியிருந்த குடிசை வீட்டின் கூரையின் கட்டைகளும் சட்டங்களும் பனையின் பங்களிப்பென்றால் அதில் வேய்ந்த கூரையும் பனைதந்த ஓலைகளே.. கட்டைகளயும், சட்டங்களையும் ஓலைகளையும் இணைத்து கட்டியதும் பனைமட்டை நார்களே.. சுட்ட ஒட்டு கூரையிலும் தாங்கும் கட்டைகள் விளைந்த பனையின் வளைகளே..
காரைவீட்டு கூரையையும் பனைமரக்கட்டைகளே தாங்கி நிற்கும்
வீட்டிற்கு கதவுகளும் சன்னல்களும் , தூண்களும் கூட பனைமரங்களின் பகுதிகளேயென்றால், வீட்டினுள் கட்டிலும் பக்குவமாய் கிழித்து பனைமட்டை நாரில் பின்னிய நார் வலையை தாங்கிய பனை மரக்கட்டில்களே..
குட்டி வடலிப்பனையின் ஓலையில் செய்த கைவிசிறி வீசி வரும் காற்று தென்றலையும் தோற்கடிக்கும்..
பனை ஓலை விசிலும் பொம்மைகளும் கிளுகிளுப்பையும் குழந்தைகள் விளையாட பனைதந்த பரிசுகள்..
சுவையான பதநீரும், பதநீரை காய்ச்சி எடுக்கும் கருப்பட்டி வகைகளெல்லாம் நலம்தரும் இனிப்புகள்
ஓலையில் செய்த பட்டைகள் பானங்கள் பருகிடவும், உணவு அருந்திடவும் ஒருமுறை உபயோக பாத்திரமாகும்
பனை நாரிலும் ஓலையிலும் வண்ணமீடு செய்த பெட்டிகளும், பாய்களும் வாழ்வோடு ஒன்றிப்போகும்..
இளம் நுங்கும் பனம்பழமும் சுவையான நலம்தரும் உணவென்றால் பனக்கிழங்கும் அதனோடு சேர்ந்துவிடும்.
வேர் கூட மனிதனின் கைப்பட கூடையாக உருமாறும்.. துடைப்பமும் பனைமரத்தின் கருணையாகும்..
உறியும் கிண்ணமும் பிறிமனையும் பனைநாரில் உருவாகும்.. பனை மட்டை உணவுகிண்ட துடுப்பாகும்
தேக்கரண்டி தேவைக்கும், சிறுவர்கள் விளையாட காற்றில் சுற்றும் விசிறிக்கும் சிறுதுண்டு ஓலைகள் போதும்
மாட்டுக்கொட்டில்களும் மாட்டுத்தாவணிகளும் பனைமரத்தின் கருணையென்றால்
பனைமரப்பகுதிகள் மாட்டுவண்டி உள்ளிட்ட விவசாயக்கருவிகளின் பாகங்களாகும்..
மொத்தத்தில் தமிழகத்து கிராம மக்களின் தினசரி வாழ்வோடு கலந்து போன
பனைமரங்கள் செல்வங்களை அள்ளி வாரி வழங்கிடும் அன்னையின் வடிவம்..
பனைமரங்களை கற்பக விருட்சங்களென்றழைப்பதை காட்டிலும்
கற்பக விருட்சங்களே பனமரங்கள்தான் என்பதே சரியாகும்..
பனை மரங்களே..கற்பக மரங்கள்..
எம்மண்ணில்
எங்கள் வாழ்வோடு கலந்து போன
பனை மரங்களின் பெருமையை
பட்டியலிட முடியுமோ?
எம்முன்னோர்கள் குடியிருந்த
குடிசை வீட்டின் கூரையின்
கட்டைகளும் சட்டங்களும்
பனையின் பங்களிப்பென்றால்
அதில் வேய்ந்த கூரையும்
பனைதந்த ஓலைகளே..
கட்டைகளயும், சட்டங்களையும்
ஓலைகளையும் இணைத்து கட்டியதும்
பனைமட்டை நார்களே..
சுட்ட ஒட்டு கூரையின்
ஓடுகளை சுட்ட விறகும்
ஓடுகளை தாங்கும் கட்டைகளும்
விளைந்த பனையின் வளைகளே..
பழங்கால கிராமத்து காரைவீட்டு
கூரைகளையும் பனைமரக்கட்டைகளே
நூறாண்டு காலமாய் தாங்கி நிற்கிறது..
வீட்டிற்கு கதவுகளும் சன்னல்களும் ,
தூண்களும் கூட பனைமரங்களின்
பாகங்களேயென்றால்,
வீட்டினுள் கட்டிலும் பக்குவமாய் கிழித்த
பனைமட்டை நாரில் பின்னிய நார் வலையை
தாங்கிய பனை மரக்கட்டில்களே..
குட்டி வடலிப்பனையின் ஓலையில் செய்த
கைவிசிறி வீசி வரும் காற்று
தென்றலையும் தோற்கடிக்கும்..
பனை ஓலை விசிலும் பொம்மைகளும்
கிளுகிளுப்பையும் குழந்தைகள்
விளையாட பனைதந்த பரிசுகளாகும்..
சுவையான பதநீரும்,
பதநீரை காய்ச்சி எடுக்கும்
கருப்பட்டி கற்கண்டு வகைகளெல்லாம்
உடலுக்கு நலம்தரும் இனிப்புகளாகும்..
ஓலையில் செய்த பட்டைகள்
பானங்கள் பருகிடவும்,
உணவு அருந்திடவும்
ஒருமுறை உபயோக பாத்திரமாகும்
பனை நாரிலும் ஓலையிலும்
கண்கவர் வண்ணம் தோய்த்தெடுத்து
செய்த பெட்டிகளும், பாய்களும்
வாழ்வோடு ஒன்றிப்போகும்..
இளம் நுங்கும் பனம்பழமும்
சுவையான நலம்தரும் உணவென்றால்
பனங்கொட்டை முளைத்து பனங்கிழங்காகும்.
முளைத்து கிழங்காகாமல் கருகிப்போன
முளைகருகிய கொட்டையும் சுவையான தவுனாகும்..
பனையின் வேர் கூட மனிதனின் திறமிகு
கைப்பட அழகிய கூடையாக உருமாறும்..
துடைப்பமும் பனைமரத்தின் கருணையாகும்..
உறியும் கிண்ணமும் பிறிமனையும்
பனைநாரில் உருவாகும்..
பனை மட்டை உணவுகிண்ட துடுப்பாகும்..
தேக்கரண்டி தேவைக்கும்,
சிறுவர்கள் விளையாட காற்றில்
சுற்றும் விசிறிக்கும்
சிறுதுண்டு ஓலைகள் போதும்
மாட்டுக்கொட்டில்களும்
மாட்டுத்தாவணிகளும்
பனைமரத்தின் கருணையென்றால்
பனைமரப்பகுதிகள் மாட்டுவண்டி
உள்ளிட்ட விவசாயக்கருவிகளின் பாகங்களாகும்..
மொத்தத்தில் தமிழகத்து கிராம மக்களின்
தினசரி வாழ்வோடு கலந்து போன
பனைமரங்கள் செல்வங்களை
அள்ளி வாரி வழங்கிடும் கருணையின்
வடிவான எங்குல தெய்வத்தின் கொடையாகும்
குறுத்தோலை அலங்காரத்தோரணமாகும்.. கற்பக மரம்
அதில் இனிப்பிட்ட மாவு வைத்து
மடித்து ஆவியில் வேகவைத்தால்
மணமிகு சுவையான எம் பாரம்பரிய
பலகாரம் ஓலைக்கொழுக்கட்டையாகும்..
அனைத்திற்கும் மேலாக அன்னைத்தமிழின்
அனைத்து அற்புத இலக்கிய படைப்புகளையும்
சில ஆயிரமாண்டு காலங்களாய் பாதுகாத்து
இன்றைய தலைமுறைக்கும்
இனி வரும் தலைமுறைக்கும்
பயனளிக்கும் வகையில் கொண்டு சேர்த்த
ஓலைச்சுவடிகளும் பனையின் சுவடுகளே..
பனைமரங்களை கற்பக விருட்சங்களென்றழைப்பதை காட்டிலும்
கற்பக விருட்சங்களே பனைமரங்கள்தான் என்பதே சரியாகும்..
இரா.பெரியசாமி..
பொதிகை மலை உச்சியில் பிறந்து தவழ்ந்து
சோலையிடை பாய்ந்து தென்றல் தழுவி தாவி குதித்து பாய்ந்து
திருக்குற்றாலம் கடந்து நெல்லையம்பதி தாண்டி
வெண்மணல் மடியில் விளையாடி படர்ந்தோடி
நவதிருப்பதியிடை பாய்ந்து தெய்வீக பெருமைபெற்று
குரங்கணி முத்துமாலை அன்னையின் ஆலயம் தழுவிய பின்
வங்கக்கடலில் அலைகளோடு சங்கமிக்கும் தாமிரபரணி
தென்தமிழகத்தையே செழிப்பாக்கி பசிபோக்கி
தாகம் தணிக்கும் வற்றாத அன்னை பொருநையின்
பெருமை பேச எமதன்னை தமிழ் மொழியால்
மட்டுமே சத்தியமாய் சாத்தியமாகும்..
இருபுறமும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட
வீரத்தமிழரின் பல்லாயிரமாண்டுகள்
பழமையான நாகரிகச் சுவடுகள்..
தாமிரபரணியின் தண்ணீரை
இரண்டாம் தாய்ப்பாலாய் அருந்தி
வளர்ந்து வாழ்ந்ததால்
பெருபான்மை இந்துக்களும்,
தமிழ் பேசும் இஸ்லாமிய தமிழர்களும்
எங்கும் கலந்துள்ள தமிழின கிருத்துவர்களும்
கலந்து உறவாடி ஒருதாய் பிள்ளைகளாய்
நெல்லைத்தமிழில் மண்ணின் பெருமை பேசுதல்
பொருநையின் பெருமையே..
எங்கள் வாழ்வோடு கலந்து போன பனை மரங்களின் பெருமையை எங்ஙனம் பட்டயலிட?? எம்முன்னோர்கள் குடியிருந்த குடிசை வீட்டின் கூரையின் கட்டைகளும் சட்டங்களும் பனையின் பங்களிப்பென்றால் அதில் வேய்ந்த கூரையும் பனைதந்த ஓலைகளே.. கட்டைகளயும், சட்டங்களையும் ஓலைகளையும் இணைத்து கட்டியதும் பனைமட்டை நார்களே.. சுட்ட ஒட்டு கூரையிலும் தாங்கும் கட்டைகள் விளைந்த பனையின் வளைகளே..
காரைவீட்டு கூரையையும் பனைமரக்கட்டைகளே தாங்கி நிற்கும்
வீட்டிற்கு கதவுகளும் சன்னல்களும் , தூண்களும் கூட பனைமரங்களின் பகுதிகளேயென்றால், வீட்டினுள் கட்டிலும் பக்குவமாய் கிழித்து பனைமட்டை நாரில் பின்னிய நார் வலையை தாங்கிய பனை மரக்கட்டில்களே..
குட்டி வடலிப்பனையின் ஓலையில் செய்த கைவிசிறி வீசி வரும் காற்று தென்றலையும் தோற்கடிக்கும்..
பனை ஓலை விசிலும் பொம்மைகளும் கிளுகிளுப்பையும் குழந்தைகள் விளையாட பனைதந்த பரிசுகள்..
சுவையான பதநீரும், பதநீரை காய்ச்சி எடுக்கும் கருப்பட்டி வகைகளெல்லாம் நலம்தரும் இனிப்புகள்
ஓலையில் செய்த பட்டைகள் பானங்கள் பருகிடவும், உணவு அருந்திடவும் ஒருமுறை உபயோக பாத்திரமாகும்
பனை நாரிலும் ஓலையிலும் வண்ணமீடு செய்த பெட்டிகளும், பாய்களும் வாழ்வோடு ஒன்றிப்போகும்..
இளம் நுங்கும் பனம்பழமும் சுவையான நலம்தரும் உணவென்றால் பனக்கிழங்கும் அதனோடு சேர்ந்துவிடும்.
வேர் கூட மனிதனின் கைப்பட கூடையாக உருமாறும்.. துடைப்பமும் பனைமரத்தின் கருணையாகும்..
உறியும் கிண்ணமும் பிறிமனையும் பனைநாரில் உருவாகும்.. பனை மட்டை உணவுகிண்ட துடுப்பாகும்
தேக்கரண்டி தேவைக்கும், சிறுவர்கள் விளையாட காற்றில் சுற்றும் விசிறிக்கும் சிறுதுண்டு ஓலைகள் போதும்
மாட்டுக்கொட்டில்களும் மாட்டுத்தாவணிகளும் பனைமரத்தின் கருணையென்றால்
பனைமரப்பகுதிகள் மாட்டுவண்டி உள்ளிட்ட விவசாயக்கருவிகளின் பாகங்களாகும்..
மொத்தத்தில் தமிழகத்து கிராம மக்களின் தினசரி வாழ்வோடு கலந்து போன
பனைமரங்கள் செல்வங்களை அள்ளி வாரி வழங்கிடும் அன்னையின் வடிவம்..
பனைமரங்களை கற்பக விருட்சங்களென்றழைப்பதை காட்டிலும்
கற்பக விருட்சங்களே பனமரங்கள்தான் என்பதே சரியாகும்..
