பார்க்க மறந்த விழிகள்
பார்க்க மறந்த விழிகள்
பார்வையாலே கொலைகள் செய்த விழிகள்
வார்த்தையின்றி மௌனத்தில் பேசிய கண்கள்
கண்களாலே கதைகள் பல பேசும்
கயல் போன்ற கண்கள் கொண்டவளே..!
காதலெனும் மாயவலையில் என்னை சிக்கவைத்து
இப்பொழுது பார்க்காமல் போகிறாய்
ஏனடி.
என்னைப் பார்க்க உன்விழிகள் மறந்துவிட்டனவோ..?