என்னவனின் வருகை என்று?
என்னவனின் வருகை என்று?
காண வேண்டும் என்று போராடும் மனதினுள்
ஏக்கம்,
நிலவுகிறது -ஒரு புறம்...
காண வேண்டும்
என்ற போராடுவதால்
இது,
காதல் ஆகிறததா?
இல்லை,
காதல் ஏற்பட்டதால் தான்
காண வேண்டும் என்று
மனது
போராடுகிறதா?
என்ற குழப்பம் மறுபுறம்......
இதற்கிடையில்,
மனதினுள் தோன்றிய
என் மன்னவன்
இதயத்தில் நுழைந்து
கனவில் வருகை
தர,
இது கனவோடு போகாமல்
நினைவோடும்
தங்காமல்,
என்னவன் என் எதிரே
எண்ணியது போல
என்று
நிற்பான்.....?
என்ற தவிப்பின்
உயிரால்
உருவாகிய.....
மன்னவனின்
வருகை....பிரிவால்
வாடும்....... மன்னவள்........