நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும்
விரல் கோர்த்து நடந்ததில்லை,
மெய் தொட்டுப் பேசியதில்லை,
வீதியெங்கும் உலா வந்ததுமில்லை!
ஒரு கோப்பைத் தேநீரின் நறுமணத்தில்,
அருகருகே அமர்ந்து,
திகட்டத் திகட்டப் பேசி மகிழ்ந்ததுமில்லை!
அலைபேசி அழைப்புகளில்
ஆயுளைக் கழித்ததுமில்லை;
ஏன்...
அடிக்கடி முகம் பார்த்துக்கொண்டதுகூட இல்லை!
ஆனாலும்...
உதிரம் முழுவதும் உன்மேல் கொள்ளைப் பிரியம்!
ஏனென்றே தெரியவில்லை...
உலகம் மறந்து,
நீ மட்டுமே போதுமென்று
ஓயாமல் அடம்பிடிக்கிறது
என் நெஞ்சம்!
— தினேஷ்

