மந்திர விளக்கு
மந்திர விளக்கு
அவன் சிந்திய
வேர்வைத்துளிகள்
வைரத்தை பெற்று தரும்
என்று அவன்
எதிர்பார்க்கவில்லை
நேர்மையை மனதில்
நிறுத்தி செயல்
புரிபவனுக்கு வெற்றி
என்றும் நிச்சயமே
இவனின் உழைப்பிற்கு
கிடைத்த பரிசு தான்
மந்திரவிளக்கோ!!
கிடைத்த பின்னும்
தனக்கென உபயோகிக்காமல்
சுற்றதாருக்காக
செய்யும் உள்ளம் தான்
கடவுளின் இருப்பிடமோ!!