மிரட்டாதே.....
மிரட்டாதே.....
உன் கரிய விழிகளின்
ஆழத்தினில்
நான் மயங்கி நின்ற
ஒரு மாலை வேளையில்
ஏனடி பொய்யுரைத்தாய்
என் மீது உனக்கு
எந்தவொரு ஈர்ப்பும்
இல்லை என்று.....
என் இதயத்தின்
துடிக்கும் காதல்
லயத்தின் ஓசைதனை
கேட்க மறந்ததா
உன் செவிகள்?

