STORYMIRROR

Narayanan Neelamegam

Tragedy

4  

Narayanan Neelamegam

Tragedy

கொரோனா

கொரோனா

2 mins
388

தானாக உருவாகினாய்  

திடீரென அவதரித்தாய் 

கண்ணுக்குத் தெரியாமல் பிறந்த 

தொற்று நோய் கிருமி நீ தானே ..!!!


அவசர வாழ்வில் உனை

அலட்சியம் செய்தோம்

அதற்காக தண்டனையா

தொட்டவர்களை

தொடர்கிறராய்

கொல்கிறராய்

ஏன் உனக்கு இந்த கொடிய குணம்.....


 உன்னால் மக்கள் யாவரும் 

தனிமையில் தவிக்கும்

அவல நிலை ஏனோ ....!!!

 

உன்னால் எந்த மனிதரும் 

கை குலுக்கவும் முடியாத 

அவல நிலை ஏனோ ....!!!  

 

உன்னால் எந்த மானிடனும்   

சமூகம் ஒன்றாக முடியாத 

அவல நிலை ஏனோ ....!!!   

 

உன்னால் எல்லா மக்களும் 

உடலும் மனமும் வலுவற்ற 

அவல நிலை ஏனோ ....!!!   

 

உன்னால் எல்லா நாட்டு  

பொருளாதாரம்  வீழ்ச்சியுற்ற 

அவல நிலை ஏனோ ....!!! 

 

உன்னால் விஞ்ஞான உலகம் 

அடிப்படை வசதியற்ற  

அவல நிலை ஏனோ ....!!!  

 

உன்னால் தொழில் நுட்பம்


மண்டியிட்டு காட்சியளிக்கும் 

அவல நிலை ஏனோ ....!!!  

 

பலகோடி ஆடவர்கள்   

ஆணவத்தால் ஆடி சிறைப்படும்   

அவல நிலை ஏனோ ....!!! 

                                                                                                                                                                            

பலகோடி மாதர்கள்   

அறியாமையால் அவதிப்படும்    

அவல நிலை ஏனோ ....!!! 

 

முன்நோக்கியே வாழ்ந்து வந்தவர்களை 

பின்நோக்கியே ஓட வைத்த உன்னை

யாரும் வரவேற்க தயாராக இல்லை

பயந்தே தவிக்கும் ஆபத்தான நிலை   

வந்த வழியே நீயாக சென்றுவிடு

எங்களை இவ்வுலகில் வாழ விடு 

கும்பிட்டு கேட்கிறோம் உனை  

இப்பூமியை விட்டு ஓடி விடு....!!!

 

இல்லையெனின்

இந்த உலகில் உன்னை தவிர 

எந்த உயிரினமும் இல்லாது 

பிணங்கள் மட்டும் தான் மிஞ்சும் ......


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy