இசை
இசை
மெல்லத் தொட்ட
என் செவிகளில்
உந்தன் இசை
வழிந்தோட
தமிழே! உந்தன்
பிள்ளைகளில்
இசையை நீ
உலகமெங்கும்
பரவச் செய்தால்
தீராத நோயெல்லாம்
தீராதோ!
சங்கராபணக்காரனுக்கு
இசையின் இனிமையை
அறியச் செய்து
நோய் தீர்க்க
தும்பிக்கையானிடம்
சென்று முறையிடுவாயோ!
மயிலோனிடம் தூது
போவாயோ!
பொருளாதாரம் ஏற்ற
இறக்கத்தால் பசியினால்
வாடும் மனிதர்கள்
குறை தீர்க்க
இசைத் தமிழே!
நீ முழங்குவாயா!