அரிச்சந்திரன்
அரிச்சந்திரன்
ஒரு பொய் சொல்வதற்காக
முனிவர் கெஞ்சியபோதும்
மறுத்த மன்னனே!
உன்வழி வாழ்ந்த
காந்தி வழி நாங்கள்
நடக்க நினைத்தாலும்
இன்னல் பல கடக்க
பொய் என்னும்
ஒற்றைக்கால் கொம்பனுடன்
காலம் முழுவதும்
வாழ்க்கைக் கப்பலில்
பாதை தெரியாது
பயணம் செய்கிறோம்!
இம்மை உலகில்
மறுமைக்கான நல்வழி
காட்ட சொர்க்கத்தில்
வழிகாட்டுவீரா!