அனலாய்.....
அனலாய்.....
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
சூரிய கதிர்களின் அனலாய்
என்னைத்தகிக்கும்
நீ இல்லாத தனிமை.
கோடைக்கால மாலைத் தென்றலாய்
நீ என்றும் எனக்கு
என்பதில் ஒரு மாற்றமும் இல்லை.
ஆனால் .... நீ
இப்போது என்னிடத்தில் இல்லை
என்பதும் சுடுகின்ற உண்மை தானே!
எரியும் சுடரின் குளிர்ந்த ஒளியாய்
என் கண்களில் நீ பிரதிபலிக்க
நீண்டு செல்லும் இரவின்
தனிமையில் மறுபடியும் நான்.