STORYMIRROR

Ravivarman Periyasamy

Romance Others

5  

Ravivarman Periyasamy

Romance Others

காரிருளின் காரிகையே

காரிருளின் காரிகையே

1 min
513

உன்னை வரைந்தது யாரோ

யாதும் அறியா இருளில்

நீ அறிவித்தது அநேகம்

விளக்கொளியில் முகம் போல

நீலக்கோளம் நீந்துது உன் பவளக்கீற்றில்

பாவைக்கும் நீயே உவமை

கவிஞன் எழுத்து கோர்வைக்கும் நீயே வளமை

நீ நீல மகளின் இரவுத் துணை

அவள் உன் ஒளிக்கீற்றை பிடித்து பயணம் போகிறாள்

யாரைக் காணவோ

உன்னை வரைந்தது யாரோ 

முகம் காட்ட வெட்கி

இருளில் மூழ்கியதேனோ

வாசம் செய்ய வந்தவனை

வழித்தடம் தெரியாமல் செய்ததேனோ

மோசம் செய்யாமல் முளைத்து தான் வாயேன்

உன் வண்ணச்சுவடறிய பாதையில் நானே

உன்னை வண்ணமிட்டது யாரோ

காரிருளின் காரிகையே

உன்னை வரைந்தது யாரோ 



Rate this content
Log in

Similar tamil poem from Romance