பிரிந்துபோன காதலி
பிரிந்துபோன காதலி
தொட்டால் சிணுங்கி செடியினைத் தொடும்பொழுது சுருங்கிவிடும் இலைகளைப் போல!
என்னை விட்டு விலகிப் போய் வாழ்வின் தனிப் பயணத்தினை மேற்கொண்ட எனது காதல் தேவதையே!
கண்களால் நேருக்கு நேராக என்னை ரசித்துப் பார்த்து என்னிடம் வந்து உனது காதலினைச் சொன்னவளே!
உன்னைத் திருமணம் செய்து கொள்ளவா? என்று வினவியபொழுது!
உன்னிடம் நிலையான வேலையும் இல்லை! பொருளாதாரமும் இல்லை என்று மறுத்தவளே!
அன்றைய காலகட்டத்தில் எனது வேலையின்மையையும் பொருளாதார நிலையினையும் எண்ணி வருந்திய இருக்கிறேன்!
இன்றைய காலகட்டத்தில் எனக்குக் கிடைத்த சிறந்த வேலையையும் நல்ல பொருளாதார நிலையினையும் எண்ணி மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன்!
அன்று எனது காதலியினை இழந்ததற்குக் காரணம் எனது பொருளாதார சூழ் நிலை!
இன்று எனது அன்பினை அவள் இழந்து நிற்பதற்குக் காரணம் அவளின் பேராசையின் பிழை!

