Arul Prakash

Comedy

4  

Arul Prakash

Comedy

சும்மா இருந்து பார்

சும்மா இருந்து பார்

7 mins
337


அஜய் (வயசு 26), ஒரு பிஸ்னஸ் மென் ஓட பையன், அவங்க வீட்ல ஒரு அக்கா, ஒரு அண்ணன் இருக்கான். அவனோட அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. அஜய் அப்பாவோட பிஸ்னஸ் பெரிய லாபத்த தரல, இருந்தாலும் அந்த பிஸ்னஸ நடத்திட்டு இருக்காங்க

அஜய்யின் அப்பா : ஏன் டி, உன் பையன் அஜய் வேலைக்கு போகாம இருக்கான், 3 மாசமா.

அஜய்யின் அம்மா : எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்.

அஜய்யின் அப்பா : நான் என்னடி பண்ணேன். அவன் வேலைக்கு போகாததுக்கு நான் எப்படி பொறுப்பு எடுத்துக்க முடியும்.

அஜய்யின் அம்மா : நீங்க ஒரு பிசினஸ் மென்னு உங்கள பேட்டி எடுக்க கூப்பிட்டா, பிஸ்னஸ் பத்தி மட்டும் பேசிட்டு வரணும்.

அஜய்யின் அப்பா : ஆமா அத தானே நானும் பண்ணேன்.

அஜய்யின் அம்மா : நல்லா பண்ணீங்க,ஒரு கேள்வி ஞாபகம் இருக்கா. பிள்ளைகள எப்படி வளர்க்கணும்னு

அஜய்யின் அப்பா : ஞாபகம் இருக்கு.

அஜய்யின் அம்மா : அதுக்கு நீங்க என் பசங்க நல்ல மனுஷங்களா இருந்தவே போதும், வேலைக்கு கூட போக தேவையில்லை, நானே அவங்கள பாத்துக்குறேன்னு சொன்னிங்கள.

அஜய்யின் அப்பா : ஆமா.

அஜய்யின் அம்மா : இப்ப அதையே புடிச்சுகிட்டு, வேலைக்கே போ மாட்டேன்னு அப்பாவையே என்ன பாத்துக்க சொல்லுன்னு சொல்லிட்டான் .

அஜய்யின் அப்பா : அட கொடுமையே.

அஜய்யின் அம்மா : நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, அவன திரும்பவும் வேலைக்கு போக வைக்கணும். ஒழுங்கா 5 வருஷமா வேலைக்கு போய்கிட்டு இருந்தவன் உங்களால இப்ப இப்படி இருக்கான்.

அஜய்யின் அப்பா : அஜய் வேலைக்கு போறது என் பொறுப்பு, என் கிட்ட விட்டுடு.

அஜய்யின் அம்மா : நீங்க ஏன் நம்ம பெரிய பையன் ராம் கிட்ட பேச கூடாது.

அஜய்யின் அப்பா : அவன் தான் எனக்கு புடிக்காத love marriage பண்ணிக்கிட்டு போனானே, அவன பத்தி என் கிட்ட பேசாத.

----------------அடுத்த நாள் -----------------

அஜய் to அஜய் அப்பா : நான் கேரளாக்கு ஒரு ட்ரிப் போய்ட்டு வரலாம்னு இருக்கேன்.

அஜய் அப்பா : நல்ல விஷயம் தான், நானும் கூட வரேன்.

அஜய் : நீங்க ஏன் வரீங்க, நான் என் நண்பன் ரகு கூட போறேன்.

அஜய் அப்பா : நானும் வரேன் டா என்ஜாய் பண்ண, அதுவும் இல்லாம, நான் என் அனுபவத்தை காட்டி, அறிவுரை சொல்லி உன்ன திரும்ப வேலைக்கு போக வச்சிடுவேனே.

அஜய் : ஓ அப்பிடியா, உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

அஜய், அஜய் அப்பா, அஜய் friend ரகு மூணு பேரும் கார்ல கேரளாக்கு கிளம்பிட்டாங்க.

கார்ல போய்ட்டு இருக்கும்போது.

அஜய் அப்பா to அஜய் : டேய், நீ வேலைக்கு போனும் டா, உன் வயசுல நான் கடுமையா உழைச்சதுனால தான் இப்ப ஜம்முனு இருக்கேன்.

அஜய் : ஓ உழைச்சதுனால தான் நீங்க இப்படி இருக்கீங்க.

அஜய் அப்பா : ஆமா.

அஜய் : முன்னாடி உட்கார்ந்துட்டு இருக்கானே ரகு அவன் அப்பாவை தெரியுமா.

அஜய் அப்பா : என்ன டா தெரியுமானு கேட்குற, என் பிஸ்னஸ் பார்ட்னர் டா.

அஜய் : அவர் என் கிட்ட சொல்லி இருக்காரு, நீங்க உழைச்சு எல்லாம் மேல வரல, நீங்க ஆரம்பிச்ச கம்பெனி ஒரு லக் ல கிளிக் ஆகிடுச்சுன்னு.

அஜய் அப்பா : ஓ சொல்லிட்டானா.

அஜய் : அது மட்டும் இல்லாம உங்களையும் ரகு அப்பாவையும் தெரிஞ்சவங்களுக்கு தெரியும், யார்னால அந்த கம்பெனி ஓடுதுனு.

அஜய் அப்பா : அப்போ என்ன முட்டா பயனு சொல்ல வர.

அஜய் : அது எப்படி என் வாயால சொல்லுவேன்.

அஜய் அப்பா : நீ சின்ன பையன் டா, உங்க அம்மாவுக்கு தெரியும் நான் எவ்ளோ பெரிய புத்திசாலினு.

அஜய் : ஓ, அம்மாவுக்கு போன் பண்ணா, உங்கள பத்தி கேட்காமலே, உங்க புத்திசாலதனத்தை பத்தி சொல்லுவாங்க .

அஜய் அப்பா : அது எப்படி டா கேட்காமலே சொல்லுவா.

அஜய் : இப்ப பாருங்க.

அஜய், அவனோட அம்மாவுக்கு போன் பன்றான்.

அஜய் to அஜய் அம்மா : ஹலோ.

அஜய் அம்மா : என்ன டா கேரளா போய்ட்டீங்களா.

அஜய் : பக்கத்துல வந்துட்டோம்.

அஜய் அம்மா : பாத்து போய்ட்டு வாங்க, உங்க அப்பாவை பாத்துக்கோ, அவர் ஒரு விவரம் இல்லாத மனுஷன்.

போன் கட் பண்ணிடுறாங்க.

அஜய் to அஜய் அப்பா : ஹா ஹா ஹா.

அஜய் அப்பா : உன்ன வேலைக்கு போடானு சொன்னதுக்கு, என்ன விவரம் இல்லாதவன், முட்டா பயனு ஆக்கிட்ட.

கேரளா போய் சேந்துடுறாங்க

அஜய் அப்பா to அஜய் : வா டா சரக்கு அடிக்கலாம், அப்பா மகன்னு பாக்காம முதலும் கடைசியுமா ஒரு தடவ சரக்கு அடிக்கலாம்.

அஜய் : அது என்ன முதலும் கடைசியுமா.

அஜய் அப்பா : என்ன தான் இருந்தாலும் அப்பா மகன் அடிக்கடி சேர்ந்து குடிச்ச நல்லாவா இருக்கும், அதான் இந்த ஒரு வாட்டி மட்டும்.

அஜய் : சரி நான் வந்துட்டேன். ரகு குடிக்க மாட்டாணாம், அவன் எதோ விரதம் இன்னைக்கு .

ஒரு சுமாரான பார் ல சரக்கு அடிக்க போறாங்க. ஆண், பெண் ரெண்டு பேரு சரக்கடிக்கும் பார்

நாலு ரவுண்டு போகுது. போதைல இருக்காங்க.

அஜய்யும் ரகுவும் எதோ விவாதம் பண்ணிட்டு இருக்காங்க.

அஜய் அப்பா : என்ன டா ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க.

அஜய் : இல்ல பா, அங்க ஒருத்தன் நிக்குறான்ல.

அஜய் அப்பா : ஆமா

அஜய் : அவன் முடி ஒரிஜினல் முடி இல்ல, wig னு சொல்லுறான் ரகு, நான் ஒரிஜினல் முடினு சொல்றேன்.

அஜய் அப்பா : ஒரிஜினல் முடி போல தான் இருக்கு. இப்ப என்ன இது wig ah ஒரிஜினலான்னு தெரியனும் அவ்ளோதான.

அஜய் : ஆமா, உன்கிட்ட ஐடியா இருக்கா.

அஜய் அப்பா : இருக்கு, ஆனா கண்டுபிடிச்சி சொன்ன, நீங்க ரெண்டும் பேரும் வேலைக்கு போய்டுனும்.

அஜய் : சரி.

அஜய் அப்பா : ரகுவ அந்த மெயின் சுவிட்ச் off பண்ண சொல்லு, நான் முடிய இழுத்து பாத்து wig ah னு முடிவு பண்றேன்.

அஜய் : சூப்பர் ஐடியா. இதுல நீங்க மாட்டிட்டு அடி வாங்கறமா இருந்த நாங்க வேலைக்கு போகமாட்டோம்.

அஜய் அப்பா : மாட்டுனா தான

அஜய் அப்பா அந்த ஆள் முடிய இழுக்கறதுக்காக பக்கத்துல நிக்கிறாரு, ரகு சுவிட்ச் off பன்றான், அஜய் அப்பா முடிய புடிச்சு இழுக்குராறு, லைட் on ஆகிடுது, பாத்தா அஜய் அப்பா ஒரு லேடியோட முடிய புடிச்சுனு இருக்காரு. அப்பறம் என்ன அந்த பொம்பள அஜய் அப்பாவை மாத்து மாத்துனு மாத்துது. அஜய் அதை பாத்து உடனே ஓடி போய் நான் நினைச்சு உங்க தலையில கைய வச்சிட்டாரு மேடம் சாரினு கூப்பிட்டுனு வந்துடுறான்.

அஜய் அப்பா to அஜய் : உங்கள வேலைக்கு போ வைக்கறதுக்கு, நான் பொம்பள கிட்டலாம் அடி வாங்க வேண்டி இருக்கு.

அஜய் : அட விடுப்பா இத போய் பெரிய விஷயமா பேசிட்டு.

ரெண்டு நாள் இருந்துட்டு கேரளால இருந்த வீட்டுக்கு கிளம்பிடுறாங்க.

அஜய் அம்மா to அஜய் அப்பா : என்னங்க அஜய் வேலைக்கு போய்டுவானா.

அஜய் அப்பா : என்னால ஆன முயற்சியை பண்ணிட்டு தான் இருக்கேன், இப்போதைக்கு ஏதும் சரியா வரல.

அஜய் அம்மா : அடுத்ததா என்ன பண்ண போறீங்க.

அஜய் அப்பா : அஜய்யும் ரகுவையும் பிரிக்க போறேன்.

அஜய் அம்மா : எதுக்கு.

அஜய் அப்பா : அஜய் கூட ரகு இருக்கருதனால தான், அவனக்கு டைம் பாஸ் ஆகிடுது, ரெண்டு பேரும் தனியா இருந்தா ரெண்டு பேருக்கும் போர் அடிக்கும் வேலைக்கு போவாங்க.

அஜய் அம்மா : எதோ பண்ணுங்க.

--------------அடுத்த நாள் ----------------

ரகு, அஜய பாக்க அவன் வீட்டுக்கு வந்து இருக்கான்.

அஜய் அப்பா to ரகு : டேய் foriegn சரக்கு என் friend தந்தான். நம்ம ஏன் இன்னைக்கு சரக்கு அடிக்க கூடாது. நீயும் எதோ விரதம்னு சொல்லி கேரளால என் கூட சரக்கு அடிக்கல.

ரகு : அதுக்கு என்ன பா, அடிக்கலாம்.

அஜய் வந்துடுறான்.

அஜய் அப்பா to அஜய் : டேய் இன்னைக்கு நானும் ரகுவும் மட்டும் சரக்கு அடிக்க போறோம். இன்னைக்கு அவன் என் friend அதுனால நீ வெளிய போறதா இருந்தா போ.

அஜய் : அம்மா இல்ல வீட்ல.

அஜய் அப்பா : இல்ல டா வெளிய போய்ட்டா.

அஜய் : சரி, ரெண்டு பேரும் கூத்து அடிங்க, நான் வெளிய போறேன்.

அஜய் அப்பாவும், ரகுவும் சரக்கு அடிச்சு போதை ஆகி பேசிட்டு இருக்காங்க.

அஜய் அப்பா to ரகு : டேய், நீ ரொம்ப நல்ல பையன் டா.

ரகு : ஏன் பா அப்படி சொல்றிங்க.

அஜய் அப்பா : என் பையன் என்ன வேல சொன்னாலும் செய்யுற நீ, கேரளால பாத்தேன் உன்ன.

ரகு : அதுல என்ன பா இருக்கு, அவன் என் friend ல

அஜய் அப்பா : அதுக்குனு உன்ன வேலைக்காரன் போல நடத்துறது, கொஞ்சம் கூட நல்லா இல்லை.

அஜய் அப்பா போன் அடிக்குது.

அஜய் அப்பா : ஹலோ.

அஜய் அம்மா : நான் தான் பேசுறேன்.

அஜய் அப்பா : சொல்லு.

அஜய் அம்மா : எனக்கு என்னமோ நீங்க அஜய்யும் ரகுவையும் பிரிக்கறது தப்பா தோணுது.

அஜய் அப்பா : அடி. போடி. போன் வை டி.

அஜய் அப்பா to ரகு : அதான் டா, you deserve a good friend. என் பையன் உன்ன வேலை காரன் மாதிரி நடுத்துறான்.

ரகு : அத விடுங்க, எங்க அப்பா, அதாவது உங்க friend பத்தி பேசுவோமா.

அஜய் அப்பா : அவன் பத்தி என்ன பேசுறது.

ரகு : நீங்க உங்களுக்கு லேடி P. A வ வேலைக்கு வச்சீங்கனு உங்க wife கிட்ட சொல்லி திட்டு வாங்கி தந்தது யாரு.

அஜய் அப்பா : யாரு.

ரகு : எங்க அப்பா தான்.

அஜய் அப்பா : என்ன டா சொல்ற.

ரகு : ஆனா பாருங்க உங்களுக்கு கோபம் வராது, நீங்க அவர ஒன்னும் பண்ணமாட்டீங்க.

அஜய் அப்பா : ஒன்னும் பண்ணமாட்டனா, அந்த ஹாக்கி bat ah எடு, இன்னைக்கு உங்க அப்பன் மண்டைய உடைக்கிறேன்.

அஜய் அப்பா அந்த bat ah எடுத்துட்டு அடிக்க கிளம்புறாரு

ரகு : நானும் வரேன்.

அஜய் அப்பா : நீ எதுக்கு.

ரகு : நானும் எங்க அப்பா மண்டைய உடைக்கணும், நான் gay னு எங்க அம்மா கிட்ட போட்டு கொடுத்துட்டார்.

அஜய் அப்பா : உன்னையும் போட்டு கொடுத்துடானா, ஆமா நீ gay வ.

ரகு : ஆமா.

அஜய் அப்பா : சரி வா. மூஞ்சிய மறைச்சா மாதிரி இந்த மாஸ்க்க போட்டுக்கோ.

ரகுவும், அஜய் அப்பாவும், ரகு அப்பாவை அடிச்சிடுறாங்க.

ரகுவும், அஜய் அப்பாவும், ஹாஸ்பிடல்ல இருக்காங்க, அஜய் வரான்.

அஜய் to ரகு : டேய் 2 மணி நேரம் தான டா, ரெண்டு பேரையும் ஒண்ணா விட்டுட்டு போனேன், என்ன காரியம் பண்ணி வச்சி இருக்கீங்க.

ரகு : சாரி டா.

அஜய் : என்கிட்ட சாரி கேட்டு என்ன ஆக போகுது. ஆமா ரெண்டு பேரும் மாஸ்க் போட்டுட்டு தான அடிக்க போன்னிங்க, அப்பறம் எப்படி உங்கள அடையாளம் கண்டு பிடிச்சாங்க.

ரகு : அதுவா எதர்ச்சியா உங்க அப்பாவோட லேடி P. A வந்துட்டாங்க ரோட்ல , உங்க அப்பா தன்னை மறந்து மாசக்க கழட்டிட்டு பேச ஆராமிச்சிட்டாரு.

அஜய் to அஜய் அப்பா : இரு உன்ன அம்மா கிட்ட சொல்றேன்.

------------------ அடுத்த நாள் ---------------

அஜய்யோட அக்கா, அஜய் கிட்ட போன்ல பேசுறாங்க.

அஜய் : சொல்லு கா.

அஜய் அக்கா : டேய் எனக்கு கொஞ்சம் கடனா காசு வேணும்.

அஜய் : ஏன் என்னாச்சி.

அஜய் அக்கா : மாமாக்கு பிஸ்னஸ் சரியா போகல. கொஞ்சம் கடன் ஆகிடிச்சி.

அஜய் : என் கிட்ட இப்போ காசு இல்ல.

அஜய் அக்கா : எங்க னா கடன் வாங்கி கொடு டா 12 லட்சம்.

அஜய் : சரி வாங்கி தரேன், எப்போ திருப்பி தருவ.

அஜய் அக்கா : நிலைமை பாத்தா. 2 வருஷம் ஆகும் போல.

அஜய் : எந்த கடன் கொடுக்குறவன் ஒத்துப்பான்.

அஜய் அக்கா : டேய் கடன் வாங்கி கொடுத்துட்டு, நீயே வேலைக்கு போய் அடைச்சுடு டா அந்த கடன. நான் ரெண்டு வருஷம் கழிச்சு, திருப்பி தந்துடுறேன்.

அஜய் : சரி இரு நான் பாக்குறேன். நீ அப்பா கிட்ட கேட்டியா.

அஜய் அக்கா : அவரு காசு இல்லனு சொல்லிட்டாரு டா.

அஜய் : சரி பாக்குறேன்.

அஜய் அவனோட அப்பாவை கூட்டிட்டு கார் விக்கிற இடத்திற்கு போறான். இந்த கார வித்தா எவ்ளோ தருவிங்கனு கேட்குறான்.

அஜய் அப்பா கண்ணுல தண்ணி

அஜய் to அஜய் அப்பா : ஏன் பா அழுவுற.

அஜய் அப்பா : இது என்னோட பழைய கார் டா இத போய் விக்குற.

அஜய் : என்ன பண்றது அக்கா காசு கேட்டாலே.

அஜய் அப்பா : டேய் இதுக்கு மேல என்னால, உண்மைய மறைக்க முடியாது, நான் தான் உன்ன வேலைக்கு போக வைக்க, உங்க அக்காவை விட்டு கடன் கேட்க சொன்னேன். நீ எனக்கு நெருக்கமான கார் விக்க வருவேன்னு எதிர் பாக்கல.

அஜய் : அப்படி சொல்லு உண்மைய, அக்காவுக்கு பிரச்னை னா முதல வீட்ட விக்கலாமான்னு யோசிக்கிற ஆளு நீ, நீ அமைதியா இருக்கவே,நீ தான் இந்த வேலைய பண்ணி இருப்பேன் எனக்கு தெரியும், அதுனால உன் கார விக்க வந்தேன்.

------------ அடுத்த நாள் -------------------

அஜய் அப்பா, அஜய ஒரு டிவி சேனல்க்கு கூட்டிட்டு போறாரு. திரும்பவும் அஜய் அப்பாவை பேட்டி எடுக்குறாங்க.

அஜய் அப்பா : இங்க நான் பேட்டி குடுக்க வரல, நான் இதுக்கு முன்னாடி ஒரு பேட்டிக்கு வந்து இருந்தேன், அதுல நான் என் பசங்க நல்ல பசங்களா இருந்தா போதும், வேலைக்கு கூட போக தேவை இல்லைனு சொல்லி இருந்தேன், அந்த வார்த்தைய இப்ப வாபஸ் வாங்கி கிறேன்.

அஜய் அப்பா to அஜய் : போதுமா டா, நான் வாபஸ் வாங்கிட்டேன். வேலைக்கு போவியா

அஜய் : மாட்டன்.

அஜய் அப்பா : வேலை இல்லனா எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான் டா. எனக்கு பிடிக்காத love marriage கூட பண்ணிக்கோ, ஆனா வேலைக்கு போ.

அஜய் : திரும்ப சொல்லுங்க.

அஜய் அப்பா : எனக்கு பிடிக்காத love marriage கூட பண்ணிக்கோ.

அஜய் : சரி நான் வேலைக்கு போறேன்.

அஜய் அப்பா : எப்படி டா ஒத்துக்கிட்ட.

அஜய் : நீ love marriage க்கு சம்மதம் தரணும்னு தான், நான் இப்படி நடந்துகிட்டேன். கடைசிய இந்த வார்த்தை தான் சொல்லுவேன் தெரியும், அதே மாதிரி நடந்துடுச்சி.

அஜய் அப்பா :நீ கே. டி டா.

-----------------------The End------------------------------



Rate this content
Log in

Similar tamil story from Comedy