STORYMIRROR

Packiaraj A

Drama Romance Thriller

3  

Packiaraj A

Drama Romance Thriller

சட்டம் ஒரு பக்கம்

சட்டம் ஒரு பக்கம்

2 mins
3

சட்டம் ஒரு பக்கம்: காதல் கதை அத்தியாயம் 7


மணமாகி இணையும் கனவுகளோடு வந்த எலிசா மற்றும் ரமேஷ் காதல் ஏமாற்றுக் கதையாக முடிந்து விட.. மனதில் வேதனையோடு.. கண்களில் கண்ணீரோடு இரு மனங்கள் பிரிந்து விடைபெற்றது...


வாடிய முகத்துடன் வாடியூர்க்கு பேருந்து ஏறியிருந்த.. ரமேஷ்யை சார் நல்லா இருக்கீங்களா என்று வேதனை அடைந்த நெஞ்சில் ஈட்டியை குத்தியது போல் கேட்டாள்...


கருமேகம் சூழ்ந்த நிலா ஒன்றுக்குள் இரு தங்க நட்சத்திரம் ஜொலித்த கருநிற பர்தா அணிந்து முகத்தை மூடி கண் மட்டுமே தெரிய.. அழகு சிலை ஒன்று கேட்டது...


நீங்க... நீங்க...என்று தழுதழுத்தான் ரமேஷ் 


நான் தான் உங்களிடம் கல்வி கற்ற அஸ்மா...என்ன இந்த பக்கம்... என்றாள் அஸ்மா..


ரமேஷ் அவனுக்கு நடந்த கதைகளை கூறி கதறினான்... வருத்தப்படாதங்க சார் எல்லாம் அல்லாவின் கிருபையினால் உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாங்க.. உங்கள் வலியை விட ஒரு பெண்ணாக நான் சந்தித்ததை விட உங்களுக்கு நடந்த இது ஒரு பெரிய கஷ்டம் கிடையாது என்றாள் அஸ்மா..


அஸ்மா கீழக்கலங்கல் ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ... இவள் சிறிய வயதிலேயே அவளது தந்தை இறக்க அம்மா தாஜ் நிஷாதான் இவளையும் இவளது அக்காவையும் படிக்க வைத்தார்.. அஸ்மா பத்து பெயில் ஆனதால் டிப்ளோமா நர்ஸ் கோர்ஸ் படிக்க வந்த போது அவளுக்கு ஆசிரியராக சென்றவன்தான் ரமேஷ்....


ரமேஷ் மீது தீராத காதல் அஸ்மாவுக்கு அப்போதே உண்டு.. அவளின் ஏழ்மையால் படிப்புக்கான கட்டணம் செலுத்த முடியாததால்..இடை நிற்க கல்வியோடு அவளது ஒரு தலை காதலும் முடிவுக்கு வந்தது..


அஸ்மாவை விட 15 வயது மூத்தவர் ஒருவருடன் திருமணம் முடிந்து.. கணவன் வேலைக்கு சென்ற இடத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு .. இவள் கைக் குழந்தையோடு இருந்தவளை முத்தலாக் செய்து விட்டான்..


இதற்கு இடையில் அம்மா தாஜ் நிஷாவும் நோய்வாய்ப்பட்டு இறக்க... தனக்கு இருந்த ஒரே ஆறுதலான அக்கா வீட்டுக்கு செல்ல... அக்காவின் கணவன் இவளுக்கு அடைக்கலம் கொடுப்பதை விட இவளை அடைவதில் குறியாக இருக்க...மிருகத்திடம் சிக்காத கவரிமானாக வெளியேறி..


கீழ்க்கலங்கலில் தனியாக பீடி சுற்றுதலில் கிடைக்கும் தொகையில் வாழ்க்கை நடத்தி வருகிறாள்..அப்போது அஸ்மாவுக்கு வயது 16 இப்போது வயது 22 ஐந்து வயது குழந்தைக்கு தாய்... அழகில் அதே 16...


இதையெல்லாம் தெரிந்து கொண்ட ரமேஷ்...


அஸ்மா நாம் மீண்டும் காதலிப்போமா என்றான் அஸ்மாவிடம்..


அதற்கு அஸ்மா சிரித்துக்கொண்டே...சார் ஐந்து வயது குழந்தைக்கு தாய்.... நான் ஒரு வாழாவெட்டி .. என்றவளின் வாயை தன் கையால் மூடிய ரமேஷ்.. அப்படி ஒரு வார்த்தையை இனி வேண்டாம்.. நான் இருக்கேன் உனக்கு துணையாக..நல்ல கணவனாக என்றான் ரமேஷ்...


மதம் கடந்து பண்பாடு கடந்து எப்படி சார் இது சாத்தியம் ...என்று கண் கலங்கினாள்..


பேருந்து வாடியூர்க்கு வந்ததது ..அவளது கையைப் பற்றினான்... அவசரம் இல்லை பொறுமையாக முடிவெடு ... நான் வருகிறேன் என்று சொல்லி பேருந்தை விட்டு இறங்கி அகன்றான்...


தொடரும்...


சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்

கதை உதவி : ஞான.அ.பா.கெளசிக் சாஸ்னு

மேலக்கலங்கல் 





Rate this content
Log in

Similar tamil story from Drama