பணி நீக்கம்
பணி நீக்கம்
பணி நீக்கம்
காலையில் வந்த செய்தி அவளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.சற்று எதிர்பார்த்த செய்தி தான் ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
வித்யா ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள்.வீட்டிற்க்கு மூத்த மகள்.
ஒரு தம்பி,ஒரு தங்கை.
தங்கை அடுத்த தம்பி.
தம்பி கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டு இருக்கிறான்.வேலைக்கு தேர்வாகி விட்டான்.அவனுடைய கனவு விவரிக்க முடியாத அளவு இருந்தது.வேலைக்கு போய் சம்பாதித்தாலும் வீட்டிற்க்கு பணம் தர முடியாது என்று கூறி விட்டான்.
தங்கை கல்லூரியில் படிக்கும் போதே காதல் ,திருமணம் குடும்பம் என்று ஆகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியவில்லை.வித்யா வேலைக்கு சேர்ந்த வருடம் அம்மா தீடீர் என்று மரணம் அடைந்து விட்டார்.அப்பாவும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். மீதி நாட்களை அவருடைய விதவை தங்கை குடும்பத்தை காப்பாற்ற சென்று விட்டார்.இந்த சூழ்நிலையில் குடும்ப பாரம் வித்யா தலையில் விழுந்து விட்ட காரணத்தால் திருமணமும் கூட செய்யாமல் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தாள்.
அப்படி இருக்கும் போது தான்,அவள் வேலை பார்த்த நிறுவனத்தை ஒரு வெளி நாட்டு நிறுவனம் வாங்கி விட்டது.அதனால் ஆள் குறைப்பு செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.வித்யா வேலையை எந்த நேரமும் இழக்க தயார் ஆனாள்.
வேலையை இழந்து விட்டால் மூன்று மாதம் சமாளிக்கலாம்,அதற்கு பிறகு வேறு வேலை கிடைக்க வேண்டும்.அதுவரை நிச்சயம் இல்லாத வாழ்க்கை.யாரிடமும் உதவி கேட்க முடியாது.கூட வேலை செய்யும் பல பெண்கள் இவளை விட மோசமான சூழ்நிலையில் இருந்தார்கள்.அவர்களுக்காக இவள் வேலையை தேவை பட்டால் விட்டு கொடுக்கும் சூழ்நிலையும் இருந்தது.
அப்படியே வேறு வேலை கிடைத்தாலும் இவ்வளவு சம்பளம் கிடைக்காது.தேவை இல்லாமல் வாங்கிய சில ஆடம்பர பொருள்களுக்கு மாத தவணை கட்ட வேண்டும்.சொந்த வீடு வேண்டும் என்று ஒரு சிங்கிள் பெட் ஃபிளாட் வாங்கி கடன் முடியும் தருவாயில் இருந்தது.
காலையில் வந்த மெயில் ஒரு மாத நோட்டீஸ் பற்றிய செய்தி.மிகவும் குழம்பி இருந்த நேரத்தில் அவளுடைய தோழி ஒருத்தி போன் செய்து பேசினாள்.ஒரு நடுத்தர வயதான இரு குழந்தைகளுக்கு அப்பா,கோவிட் காய்ச்சல் வந்து மனைவி இறந்து விட்டார்.அவரும் மென்பொருள் நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக பணி புரிகிறார்.குழந்தைகளை பார்த்து கொள்ள அவருக்கு நேரம் இல்லை.
வீட்டில் பெரியவர்களும் யாரும் இல்லை.காதல் திருமணம் வேறு.சுத்தமாக வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்க பட்டவர்.இதற்காக வேண்டி இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேடி கொண்டு இருக்கிறார்.
மென்பொருள் நிறுவனத்தில் யாராவது பெண்கள் அவரது தேவைக்கு கிடைக்க வாய்ப்பு உண்டா என்று தேடி கொண்டு இருக்கிறார்.குழந்தைகளை பார்த்து கொண்டால் போதும்,வேலைக்கு போக வேண்டாம்.திருமணம் செய்து கொண்டாலும் சரி,இல்லாவிட்டால் குழந்தைகளை வீட்டோடு தங்கி பார்த்து கொண்டாலும் கூட அதற்கேற்ப சம்பளம் கொடுக்க தயார் என்கிறார்.அது போல யாராவது உனக்கு தெரிந்தால் சொல்லடி என்று தோழி கூறினாள்.
வித்யா உடனே அவர் நம்பர் அனுப்பி வை,யாராவது தெரிந்தால் அவரை தொடர்பு கொள்ள சொல்கிறேன் என்றாள்.
இரவு படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து பார்த்தாள்.அப்பாவும் கூட இல்லை.தம்பியும் உதவ மாட்டான்.தங்கைக்கு இவள் பணம் கொடுத்தால் வாங்கி கொள்வாள்.
அப்புறம் தன்னுடைய நிலை.வேலை இல்லாமல் யாரை திருமணம் செய்து கொள்ள முடியும்.37 வயது ஆகிறது.ஒடும் மின்விசிறியை பார்த்து கொண்டே இதில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்து கொள்ளலாமா,இல்லை போராடி பார்ப்பதா என்று யோசித்தாள்.
சிந்தனையை மாற்ற போனை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள்.தோழி அனுப்பிய அந்த முதன்மை அதிகாரி எண் வந்து இருந்தது.நேரம் பார்த்தாள் மணி 11.30,காலையில் உங்களுடன் பேச வேண்டும் எந்த நேரம் உங்களுக்கு சௌகரியம் என்று செய்தி அனுப்பினாள்.
அவர் சம்மதித்தால் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பணிக்கு சம்மதம் தெரிவிக்க தயார் ஆனாள்.
அதிகாலை 6.30 மணிக்கு அவரே கூப்பிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார்.வரும் ஞாயிறு விடுமுறை நேரில் வந்து சந்திக்க சொல்லி விலாசம் அனுப்பினார்.
இவளும் அந்த பணிக்கு சேர மனதை தேற்றி கொண்டு ஞாயிறு காலை அவர் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி கொண்டு இருந்தாள்.
கதவை திறந்த ஒரு சின்ன பையன்
Welcome என்றான்.
முற்றும்.