Arul Prakash

Drama

5  

Arul Prakash

Drama

குடும்பத்தில் நாலு சகுனிகள் 08

குடும்பத்தில் நாலு சகுனிகள் 08

4 mins
479


ரகுவும் விசுவும் பேசிட்டு இருக்காங்க ஹால்ல உட்கார்ந்துட்டு.ஆதித்யா அவங்கள பாத்துட்டு பாக்காம போறான்.

ரகு to விசு : என்ன டா ஆதித்யா நம்மள பாத்தும் பாக்காத மாதிரி போறான்.

விசு : விஷயம் தெரியுமா தெரியாதா.

ரகு : என்ன விஷயம் டா.

விசு : கிரிஜா மேட்டர்.

ரகு : என்ன கிரிஜா மேட்டர்.

விசு : டேய் நீ இந்த வீட்ல வாழ்றதே வேஸ்ட் டா.

ரகு : முதல விஷயத்தை சொல்லு டா.

விசு : ஆதித்யா அப்பா கிரிஜாவ வச்சிட்டு இருந்தாரம்.

ரகு : என்னது கிரிஜாவ வச்சிட்டு இருக்காரா.

விசு : இல்ல டா இறந்த காலம்,வச்சிட்டு இருந்தாரு.

ரகு : ஓ. இது எப்படி டா என் காதுக்கு வரல.

விசு : விடு இப்ப தெரிஞ்சிக்கிணல.

ரகு : அதனால தான் ஆதித்யா நம்மள பாத்து ஒளியுறானா. ஆனா இதுக்கு அவன் என்ன பண்ணுவான்.

விசு : நம்ம எதுனா தப்பா பேசப்போறம்னு நினைச்சு இருப்பான்.

ரகு : அது எப்படி டா, ஆதித்யா நம்ம பய. ஆமா கெழவிக்கு இப்போநாச்சும் அவங்களோட பெரிய பையனோட அழகு தெரிஞ்சுதா.

விசு : கிழவிக்கு முன்னாடியே தெரியும், கிரிஜா அவரோட இருந்த தொடர்ப வெளிய சொல்லாம இருக்கறதுக்கு மாசா மாசம் காசு கொடுத்து இருக்கு.

ரகு : அட பாவமே

விசு : இப்போ ஒரு விஷயம் சொல்றேன் தாங்கிக்கோ.

ரகு : சொல்லு தாங்குவேன்.

விசு : கிரிஜா குழந்தைக்கு ஆபரேஷன் பண்ண 10 லட்சம் கொடுத்தாரு ஆதித்யா அப்பா.

ரகு : எனக்கு நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கு.

விசு : ஹா ஹா ஹா.

ரகு : நீ எனக்கு இவளோ விஷயம் சொன்னல, நான் உனக்கு இந்த வீட்ல நடக்க போற ஒரு சம்பவத்தை சொல்ல போறேன்.

விசு : என்னது டா அது.

ரகு : அசோகோட முதல் அண்ணன் இன்னைக்கு கல்யாணம் பண்ண போறான்.

விசு : யாரு பொண்ணு, ஆதித்யா அண்ணன் ஒன்னு சைடா லவ் பொண்ண பொண்ணா.

ரகு : ஆமா அதே பொண்ணு தான்.

விசு : அப்போ இன்னைக்கு பெரிய சண்டை இருக்கு.

ரகு : நம்ம நின்னு வேடிக்க பாத்தா போதும், நம்ம நினைச்சது எல்லாம் நடக்கும்.

கிழவி வெளிய ஹால்ல படுத்துட்டு இருக்கா, காத்துக்காக.

அசோக் அண்ணன் கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடுறான். எல்லாரும் வீட்ல ஷாக் ஆகி பாக்குறாங்க.

ஆதித்யா அண்ணன் to அசோக் அண்ணன் : டேய் ச்ச என்ன காரியும் டா பண்ணிட்டு வந்து இருக்க.

அசோக் அண்ணன் : எல்லாம் நல்ல காரியம் தான். நீ தள்ளு.

ஆதித்யா அண்ணன் : அவ என்ன ஜாதியோ.

அசோக் அண்ணன் : அது நீ அவள ஒன் சைடு லவ் பண்ணும் போது தெரியலையா.

ஆதித்யா அண்ணன் : அப்பா அம்மாக்கு தெரியாம கல்யாணம் பண்ரா இவ நல்ல பொண்ணா இருப்பாளா.

அசோக் அண்ணன் கோபபட்டு அடிச்சிடுறான் ஆதித்யா அண்ணன. ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு இருக்கப்போ. ஆதித்யா அப்பா, அசோக் அண்ணன அடிச்சிடுறாரு.

அசோக் அப்பா to ஆதித்யா அப்பா : நீ எப்படி என் புள்ளைய அடிப்ப, நீ உன் புள்ளைய அடிச்சி இருக்கணும்.

ஆதித்யா அப்பா : அவன் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கான்.

அசோக் அப்பா : அத நாங்க கேட்போம். நீ கேட்காத.

ஆதித்யா அப்பா : நான் தாண்டா உங்களுக்கு மாசா மாசம் காசு கொடுக்குறேன். நான் கேட்க கூடாதா.

விசு அம்மா : இரு இரு என்ன சொன்ன நீ எதுக்கு எங்களுக்கு மாசா மாசம் சம்பளம் தர மாதிரி தர,நாங்களும் இந்த வீட்டுக்கு முதலாளிங்க தான். எங்களுக்கு சம்பளம் வேணாம், லாபத்துல பங்கு வேணும்.

ஆதித்யா அப்பா : நான் உனக்கு நல்லா தானமா பண்ணேன்.

விசு அம்மா : உன் கிட்ட பத்து ரூபா வாங்குறதுக்கு, நாங்க பத்தாயிரம் தடவ கேட்கணும், ஆனா நீ கிரிஜா பொண்ணு ஆபரேஷன்க்கு 10லட்சம் தருவ.

ஆதித்யா அப்பா : அப்போ நான் இந்த குடும்பத்துக்கு நல்லதே செய்லயா.

அசோக் அப்பா : என்ன நல்லது செஞ்ச என் பசங்களுக்கு சின்ன ஸ்கூல்ல படிக்க வைப்ப, உன் புள்ளைங்கள நல்ல ஸ்கூல்ல படிக்க வைப்ப.

ஆதித்யா அப்பா : உன் ரெண்டாவது புள்ள, வெளி நாட்டுல நல்லா தானே இருக்கான்.

அசோக் அப்பா : அது அவன் படிச்சு முன்னேறுனது.

ஆதித்யா அப்பா : என்ன பத்தி இன்னும் என்னலாம் சொல்ல போறீங்க.

ரகு அப்பா : ஏன்டா என்னோட கதைகள் எல்லாம் கொளுத்தி, என்னோட வாழ்க்கையே அழிச்ச, இப்போ நடிக்கிறியா.

ஆதித்யா அப்பா : நிஜமா அத நான் பண்ணல.

விஜயா அம்மா : ச்ச பொய் சொல்லாத, நான் நேர்ல பாத்தேன்.

ஆதித்யா அப்பா : வேற யாருக்கு என்ன பத்தி பேசணும்.

ரகு அம்மா : சரி நீங்க நல்லவருனு வச்சிக்கோங்க, என் கிட்ட பேச சொல்லி ஒரு தடவ உங்க அம்மா கிட்ட சொல்லி இருக்கலாமே, நீங்க ஏத்தி வேணா விடுவீங்க. வெட்கப்படுங்க இந்த வாழ்க்கை வாழ.

ஆதித்யா அப்பா : எல்லாருக்கும் என் மேல இவளோ கோபம் இருக்கா.

விசு அப்பா : நான் இன்னும் உங்கள பத்தி பேசல.

ஆதித்யா அப்பா : நீங்களுமா, சரி உங்க பங்குக்கு ஒன்னு சொல்லுங்க.

விசு அப்பா : முதல நீங்க என்ன புடிச்சு மாப்பிளை ஆக்குனீங்க நினச்சேன், அப்பறம் தான் கண்டுபிடிச்சேன், நீங்க என்ன மாதிரி அடிமைய உங்க தங்கச்சிக்கு தேடி இருக்கீங்கன்னு. பணத்தாசை புடிச்ச மிருகம் யா நீ.

பாட்டி : நிறுத்துங்க டா.

சொல்லிட்டே கெழவி நெஞ்ச புடிச்சிட்டு நெஞ்சு வலியில துடிக்குது. அத ஹாஸ்பிடல்க்கு தூக்கிட்டு போறாங்க.

கொஞ்சம் நேரம் கழிச்சு டாக்டர், பாட்டி நல்லா இருக்காங்கனு சொல்றாரு. எல்லாரும் சந்தோஷம் ஆகுறாங்க. அப்பறம் கிழவி அந்த சண்டைய பாத்து, சொத்தை எல்லாருக்கும் பிரிச்சி தந்துடுறாங்க. அந்த வீட்ட வித்துடுறாங்க. விவசாய நிலத்தை சமமா பிரிச்சு தந்துடுறாங்க.

நாலு மாசம் கழிச்சு, அசோக்கோட ரெண்டாவது அண்ணன் சுரேஷ் வெளிநாட்டுல இருந்து திரும்பி வரான், சொத்தை பிரிச்சுட்டாங்கன்னு கேள்வி பட்டு வருத்த படுறான்.

அப்பறம் வித்த வீட்ட திரும்பவும் வாங்குறான் இவன் காசு போட்டு. கிழவிக்கு அந்த வீட்ட பேரன் திரும்பவும் வாங்குனது ரொம்ப சந்தோஷம். கெழவி பெரிய பையன் கூட தங்கிடுது.

சுரேஷ் எல்லா பெரியப்பா பசங்க, சித்தப்பா பசங்க, அத்தை பசங்களையும் வாங்குன பழைய வீட்டுக்கு கூப்பிடுறான். சில பசங்க வராங்க, சில பேரு வரல. நீங்க எதிர் பாத்த அந்த நாலு சகுனிகள் வராங்க.

சுரேஷ் : உங்க எல்லாரையும் பாத்தது ரொம்ப சந்தோஷம்.

ஆதித்யா : எங்களுக்கும் தான்.

சுரேஷ் : ஆமா நீங்க தான அந்த நாலு சகுனிகள், குடும்பத்தை பிரிக்கணும்னு ஆசை பட்டது.

ரகு : உங்களுக்கு எப்படி தெரியும்.

சுரேஷ் : கீதா தான் சொன்னா.

ரகு : கீதாவா.

சுரேஷ் : ஆமா கீதா தான், நானும் அவளும் லவ் பண்றோம்.

ரகு : லவ்வா.

சுரேஷ் : டேய் உங்க கிட்ட சொல்லிட்டேன் பிரிச்சு விடணும்னு நினைக்க மாட்டீங்களே.

விசு : இல்ல இல்ல. எங்களுக்கு குடும்பத்தை பிரிக்க ஒரு ஒரு காரணம் இருந்தது, அது மட்டும் இல்ல எங்களால குடும்பம் பிரியல, அதுவா நடந்துச்சு கடைசியா. நாங்க போட்ட பிளான் லாம் வேஸ்ட்டா போய்டுச்சு.

சுரேஷ் : இப்ப எப்படி தனியா போன பிறகு சந்தோஷமா இருக்கீங்களா.

விசு : இப்போ நல்லா இருக்கோம்.

சுரேஷ் : பெரியவங்க பேசிக்கலனாலும் நம்ம எல்லாரும் பேசிக்கணும், அத சொல்ல தான் கூப்பிட்டேன். இந்த நம்ம பழைய வீட வாங்கிட்டேன், இங்க நீங்க எப்போ வேணா வரலாம். இது உங்க வீடு போல.

ஆதித்யா : கண்டிப்பா சுரேஷ். நம்ம எல்லாம் ஒண்ணா இருப்போம்.

வீட்டோட சின்ன பசங்க எல்லாம் ஒன்னா இருக்க ஆரமிச்சாங்க.

---------------The End--------


Rate this content
Log in

Similar tamil story from Drama