இரட்டை சகோதரர்கள்
இரட்டை சகோதரர்கள்
அருண் தருண் இருவரும் இரட்டை பிறவிகள்.இருவருமே படிப்பில் முதலாவதாக இருப்பார்கள்.அப்பா ஒரு வங்கியில் மேனஜர்.அம்மா கல்லூரி ஆசிரியை.இரட்டையர் இருவரும் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும்.குறைந்தது பத்து பேருக்கு வேலை கொடுக்க வேண்டும்.என்று எண்ணி இருவருமே படிப்பை தொடர்ந்து வந்தனர் பள்ளி படிப்பு முடிந்து இருவரும் பொறியியல் படிப்பில் சேர்ந்து மென்பொருள் பற்றி படிக்க விருப்ப பட்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த படித்தனர்.மென் பொருள் பொறியாளர் ஆக வேண்டும்.அந்த துறையில் சொந்தமாக சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் சேர்ந்து படித்தனர்.
பட்டம் வாங்கும் வரை எல்லாமே நன்றாக போய் கொண்டு இருந்தது.இருவரும் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்த வேண்டும் என்பது தான் அவர்களின் கனவு.
அதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.தொழில் தொடங்க முதலீடு தேவை.பெற்றோர்கள் வசம் இருக்கும் சேமிப்பு,அவர்கள் வயதாகும் போது அவர்களுக்கு அது தேவையாக இருந்தது.வங்கியில் கடன் கேட்டால் முன் அனுபவம் பற்றி கேட்கிறார்கள்.அதற்கு வேண்டி இருவரும் மென்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து வேலையும் செய்து கொண்டு,அதை பற்றியும் தெரிந்து கொண்டு வந்தார்கள்.அப்படியும் இப்படியும் மூன்று ஆண்டுகள் ஓடி விட,கையில் கொஞ்சம் பணமும் சேர்ந்து கொண்டது.ஆனால் முதலீடு செய்ய அது ஒரு சிட்டிகை அளவே.கடன் கேட்கும் அளவில் பத்து சதவீதம் சொந்த முதலீடு வேண்டும் என்று வங்கிகள் சொல்லி கொண்டு இருக்க,அந்த பத்து சதவீதம் தான்
இன்னும் சேர்த்த முடியவில்லை.
அப்போது ஒருவர் இரட்டையர் ஆரம்பிக்கும் தொழிலில் முதலீடு செய்ய முன் வந்தார். அவர் சொல்லும் மென்பொருளை உருவாக்கி தரவேண்டும்.இரண்டு வருட ஒப்பந்தம்.அதற்கு பிறகு அந்த நிறுவனம் அருண் தருணுக்கு சொந்தம் ஆக்கி கொள்ளலாம் என்று கூறினார். இவர்களும் சரி என்று சொல்ல அவரும் தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுத்தார்.ஒரு அலுவலகம் நடத்த இடம்,அருண் தருண் இருவருக்கும் சம்பளம் என்று எல்லாமே ஏற்பாடு செய்து கொடுத்தார்.ஆனால் உருவாக்கும் மென்பொருள் பல இடங்களில் தடை செய்ய பட்ட ஆன்லைன் விளையாட்டு.அப்போதைக்கு அது உள்நாட்டில் தடை செய்ய படவில்லை.இந்த விசயம் அலுவலகம் ஆரம்பிக்கும் நாளில் தான் முதலீடு செய்தவர் இவர்களுக்கு சொல்லி உள்ளார்.இவர்களும் ஒப்பந்தத்தை மீற முடியாமல் அதை செய்து கொடுக்க தொடங்கினார்கள்.இரண்டாம் ஆண்டு ஒப்பந்தம் முடியும் தருவாய்
வரை பிரசனையில்லாமல் போய் கொண்டு இருந்தது.அந்த நேரத்தில் தன்னுடைய பங்கை இருவருக்கும் மாற்றி கொடுத்து விட்டு,அவர் விலகி விட்டார்.அவர் முதலீடு செய்த தொகையை விட இரு பங்கு லாபம் பார்த்து விட்டார்.
அவரும் இரண்டாம் வருடம் முடியும் முன்பே விலகி விட்டு,இரண்டாம் ஆண்டு முடிய ஒரு மாதம் வரை அந்த மென்பொருள் வேலை செய்ய வேண்டும்,அதற்கு பிறகு அதை நிறுத்தி கொள்ளலாம்,மூன்றாம் வருட ஆரம்பத்தில் அருண் தருண் சொந்தமாக மென்பொருள் தயாரித்து விற்று கொள்ளலாம் என்பது தான் ஒப்பந்தம்.
இரட்டையர் இப்போது இந்த நிறுவனத்தின் சொந்தகாரர் ஆகி கொள்ளலாம்.ஏற்கனவே நிறுவனம் இரட்டையர் பேரில் தான் இருக்கிறது,ஆனால் பங்கு குறைவு.
முதலீடு செய்தவர் விலகி போகும் போது தனக்கும் இந்த நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்று எழுதி வாங்கி கொண்டு விலகி விட்டார்.
அந்த மென்பொருள் உள்நாட்டிலும் தடை செய்து விட,காவல் துறை வந்து அருணையும் தருணையும் கைது செய்தது. இப்போது வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
கனவு நிறைவேற சிக்கலில் மாட்டி கொண்டனர் இரட்டை சகோதரர்கள்.