யார் காரணம்??
யார் காரணம்??
படைத்தவன் அளித்த
பூமியில் நிம்மதி
சிறிதளவும் இல்லையென்று
முன்பின் அறியா
வேற்று உலகிற்கும்
செல்ல துணிந்த
உயிர்களின் நிலைக்கு
யார் காரணம்??
கூடி இருக்கையில்
இருக்கும் மகிழ்வு
வேறு எதிலும்
இல்லையென்பதை
எப்பொழுது
புரிந்துகொள்ள போகிறோம்??
நிலையில்லா உலகில்
நிகழும் சம்பவங்கள்
நினைக்கையில்
நெஞ்சம் தவிக்கிறது...