பெண்மையே வாழ்க!
பெண்மையே வாழ்க!
பெண்மையைப் போற்றுவதற்குப் பல நூல்கள் அன்று, தூற்றுவதற்கென்றே முகநூல்களாம் இன்று!
கங்கனம் கட்டி பெண்மையைப் போற்ற பாரதி. மீம் என்னும் பெயரில் பெண்ணைத் தூற்ற சாரதி!
வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார் வெல்வாரோ?
காட்டில் பெண் துணையுடன் வாழும் சிங்கமே யானாலும்,
நாட்டிலும் வீட்டிலும் ஆணின் பெருமை தான்!
பெற்றெடுத்தாலும் பெண்மை பேரெடுப்பதில்லை,
ஆணின் கர்வத்தில் தான் அமையும், என் பிள்ளை என்று!
ஆலமரமாய் விழுதுகளை உருவாக்க மட்டுமில்லாமல், வேப்பமரமாய் கசந்தாலும் பயனோடு இருப்போம்!
சூரியகாந்தியாய் சூரியனை எதிர்பார்த்தில்லாமல்,துளசியாய் அடுத்தவர் போற்ற நடப்போம், பெண்ணே!