விழியின் வ(லி)ழியே...
விழியின் வ(லி)ழியே...
உன் கண்கள்..
மௌனத்தின் மாயாஜாலம்
வார்த்தைகளின் உச்சம்..
உன் இரு விழிகளின் வழியே
தொலைந்தது என் மொழிகள்...
உன் கண் மொழியால்
என் கண் இமையாமல்...
உன் கண் கொண்டு கண்டேன்
என் இதயத்தை...
வாள் கொண்டு செய்த விழியோ
வலித்தாலும் வழி இல்லை தப்ப...
உன் விழி எனைக் கொண்ட போது
கண்டேன் என் உயிர் கரைந்ததை...
உன் விழியால்
என் மொழிகள் மௌனமாய்...