பிரிவின் துாரங்கள்
பிரிவின் துாரங்கள்
என் காதலியின் முகமோ
என் விழிகளில்..
துடிக்கும் என் கண்களோ
தேடி தேடி கேட்கின்றது..
இரயிலின் பயணமோ நீளுகின்றது..
வெகுதூரத்தில் இருக்கும் என் காதலியின் முகத்தை காண கண்களோ விரைந்தது..
நெஞ்சில் குத்திய அவளின் பெயரை
என் கைகள் தடவி கொடுத்தே வந்தது..மனதில் உள்ள அத்தனை ஆசைகளையும் அவளிடம் கொட்டி தீர்க்க மனமோ தட்டி தவிக்கின்றது..
இவ்வளவு நாட்கள் உன் பிரிவின் வேதனை இரணமாய் வலிகின்றது..
தூரங்கள் நீள
என் கண்களை மூட
ஜன்னல் ஓர காற்றில்
மழை துளிகள் என் மேல் விழ
என் காதலியின் நினைவில்
மிதந்து நின்ற என் இதயம் சொன்னது என்னுயிர் என்றும் நீதானே...
காணாத கண்களை தேட வேண்டாம் உன் இதயத்தில் என்றும் உயிராய் துடித்திருப்பேன் என்றது..