பேசாதே இருந்துவிடேன்
பேசாதே இருந்துவிடேன்
பேசாதே இருந்துவிடேன்... நீ...
ஒரு கணம் பேசிவிட்டு
ஓராயிரம் கணம் பேரமைதி
எத்தனை கோவமோ...
ஏதும் நிலைப்பதில்லை.
பேசாது இருக்கையில் ஒன்றுமறியவில்லை
பேசிப்பேசி விளையாடும் போது
மனம் மெல்ல வசந்தத்தை அசைபோடுகிறது
கனத்தைத் தாங்க வலுவில்லை...
நினைவெனும் முள் தைத்து
நெருடிக் கொண்டே இருக்கிறது...
பிடுங்கி எறிய எத்தனிக்கையில்
மேலும் உள்ளேறுகிறதேயன்றி
வெளியேறுவதில்லை...
பேசாதே இருந்துவிடேன்... நீ...