ஒரு நல்ல நாள்
ஒரு நல்ல நாள்
கடவுள் படைத்ததில் தீங்கென ஏதும் உண்டோ?
பாம்பின் விஷயம் கொடியது. இருப்பினும் கொடிய விஷத்திலும் மருந்து உண்டு.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பர். பாம்பின் முட்டைக்குள் இருக்கும் குட்டியின் தாய் அதுவல்லவோ?
ஒவ்வொரு தீங்கிலும் ஓர் நன்மையும் உண்டு. போர் முடிவினில் பிறக்கும் அமைதியைப்போல்.
மனிதனின் மனதுக்குள் எத்தனை வன்மம்? சாதி என்றும் மதம் என்றும் எத்தனை எத்தனை பிரிவினைகள்?
பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் எதுவாயினும் அது அடுத்த தலைமுறையினரையும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் என்பதை நினைவில் கொண்டு இந்தப் பூ உலகில் சமாதானம் நிலைக்க ஒரு நல்ல நாளை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன்...