நேசவிதி
நேசவிதி
வெறுத்துக் கொண்டே இருப்பவர்களின் திடீர் அன்பு, கொலைகாரனின் கருணை,வன்முறையாளர்களின் தரிசன அன்பு, இவற்றிற்குத்தான் இங்கு பெருமதிப்பு
எப்போதும் அன்பாயிருப்பவர்களின் அன்பு யார் கண்ணுக்கும் அகப்படாமல் அதுவே அவர்களின் இயல்பென, அதுவே அவர்களின் கடமையென எண்ணிக்கொள்ளப்பட்டு புறக்கணிப்புகளையே சந்தித்துக் கொண்டு இருக்கும்
நிராகரித்துப் போனதற்கெல்லாம் வருத்தமில்லை எதற்காக நிராகரித்தாயோ அதை மிகையாய் கொண்டவர்களிடம் போய் அல்லல் படுகிறாயே அங்குதான் என் சாத்தான் விழித்துக்கொள்கிறது
வாழ்வின் கருணை எல்லையற்றது வாழ்வின் குரூரம் அதைவிட