மௌன ராகம்
மௌன ராகம்
பக்குவம் அறியா
பருவத்தில் முளைத்து;
ஏதேதோ எண்ணங்களை
நெஞ்சில் வளர்த்து;
சிறகில்லாமல் வானில்
பறக்க வைத்து;
மறக்கவியலா
தருணங்களை
பரிசளித்து;
தனிமையில் இனிமை
காண வைத்து;
அகத்தையும் முகத்தையும்
அன்பால் நிறைத்து;
சாரல் மழையாக
வாழ்வை இனிக்க வைத்த
காதல் காற்று
புயலாக வீசியிருந்தாலும்
தாங்கி கொண்டிருப்பேன்,
மௌனமாக கடந்துவிட்டது
தனக்கான தனி பாதையில்!

