காதலினை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்
காதலினை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்
காதல் வயப்படும்பொழுது நடந்த இனிமையான நிகழ்வுகளை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்!
எதிர்காலத்தின் வாழ்க்கை இலக்குகளை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று சிறிது ஏக்கம் அடைகிறேன்!
உணர்வுப் பூர்வமாகக் காதலை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட காலகட்டங்களை நினைத்துப் பூரித்துப் போகிறேன்!
முதன் முதலில் அவளைப் பார்த்தபொழுது நான் நிலைகுலைந்து போய் நின்றதனை நினைத்துச் சிறிது நாணம் கொள்கிறேன்!
என்னவளைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்கமாட்டேன் என்கின்ற எனது உறுதியான கருத்தினை நினைத்துக் கர்வமாகிறேன்!
கல்லூரி பயிலும் காலங்களில் எனக்குக் கிடைக்காத காதலினை நினைத்துத் தற்பொழுதுப் பெருமை கொள்கிறேன்!
நல்ல வேலையும் சிறந்த பொருளாதாரமும் பெற்று மன முதிர்ச்சியுடன் நான் இருந்த காலங்களில் எனக்குக் கிடைத்த காதலினை நினைத்து ஆனந்தமடைகிறேன்!
அன்பு பாசம் நேசம் மற்றும் காதல் ஆகியவற்றை முழுவதும் அடைந்ததன் மூலம் சிறிது தற்பெருமை கொள்கிறேன்!
துன்பத்திலும் துயரத்திலும் என்னுடன் என்றும் நிலைத்து நின்ற காதலினை கவிதை வரிகளாகப் படைக்கிறேன்!
தூய்மையான நட்புடன் சில காலம் பழகிய நினைவுகளை நினைத்து ஓய்வு நேரங்களில் மெய் மறந்து போய் நிற்கிறேன்!
திருமணத்தில் முடிந்த காதலை நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்!
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு முதுமையிலும் விட்டுக் கொடுக்காத காதலின் நினைவலைகளை எனது மனதிலே சுமந்து கொண்டு அதிகாலை நடைப் பயிற்சி மேற்கொள்கிறேன்!
இல்லற வாழ்வில் பல ஆண்டுகளாக நாங்கள் சந்தித்த துன்பங்களைச் சரியான மனப் பக்குவத்துடன் எதிர்கொண்டு இன்பங்களாக மாற்றிய நிகழ்வுகளை நினைத்துப் பூரித்துப் போய் நிற்கிறேன்!
கலங்கரை விளக்கம்போல எங்களின் காதல் திருமண வாழ்வு உயர்ந்து நிற்பதாகக் கற்பனை செய்கிறேன்!
எங்களின் திருமண நாளை எங்களின் காதலர்த் தினமாக நினைத்து எனது காதலிக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்கிறேன்!
என்றும் எங்களின் நிரந்தரமான காதலினை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்!