STORYMIRROR

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

காதலி

காதலி

1 min
175


விழிகளின் வழியே

உயிரில் கலந்த 

அதிசய உணர்வே!


எண்ணம் கிளர்ந்து

மனதில் வாழும் 

உண்மை நேசமே!


உன் பார்வை வீச்சில்

பல்லாயிரம்

கவிதை பிறக்கும்!


உன்னைப் பார்க்கும்போது

சிறகுகள் இல்லாமலேயே

பறக்கிறது எனது இதயம்!


உன் நினைவுகள்

தென்றலாய்த் தழுவும் போது

மனம் மெருகேறுகிறது!


உன் வாசனை

என் மூச்சாய்

சுவாசப்பைகள் நிரப்பும் போது

நெஞ்சில் நீங்கா

இனிமை உணர்கிறேன்!


உன்னுடன் இருக்கும் நாட்கள்

உள்ளத்திற்குத் தேன்!


நீ ஆருகில்

இல்லா நேரங்கள்

அனைத்தும் வீண்!






Rate this content
Log in

Similar tamil poem from Romance