காதல் கதை
காதல் கதை
வெள்ளை உள்ளமாய்
என் வாழ்வில் வந்தாய்
ஒற்றை கடிதத்தில்
காதலை உரைத்தாய்
விழிகளின் மொழியில்
கவி இயற்றினோம்
பறவைகள் போல்
பறக்க விழைந்தோம்
இசையெனும் உன் குரலில்
மயங்கி தான் போனேன்
உன் கைகளில்
என்னையே தந்தேன்
ஒன்றும் புரியவில்லை
என் ஸ்வாசமாய் இருந்தவள்
கண்ணாடி போல் என்
இதயத்தை உடைத்து ஏனென்று!