இயற்கை
இயற்கை
பூக்கள் மலர்ந்திட
மழையும் பொழிந்திட
மான்கள் ஓடிட
மயிலும் ஆடிட
மேகத்தின் மொழியை வாசி
குயிலின் கதையை பேசி
புதரின் புதிரை யோசி-நீ
இயற்கையின் மழலையை நேசி
இறைவன் படைத்த வெகுமதி
இயற்கை என்னும் சன்னதி
மனதை மயக்கும் வென் சதி-இது
பாலகர் போற்றும் உயிர்கதி