இயற்கை அன்னை
இயற்கை அன்னை
அம்மா என்னும் சொல்லை விட
அழகான சொல் இருந்திடுமா
அம்மா என்னும் உறவின் முன்
வேறு உறவுகள் ஜெயித்திடுமா
பத்து மாதம் சுமந்த அன்னையை
சில கணங்கள் நாம் பார்த்துக்கொண்டாலே
பூரித்து போவாள்
காலம் எல்லாம் நெஞ்சில் அவளை சுமந்தால்??
நாம் வளரும் பொழுது கூட அவள்
எதிர்பார்ப்பதில்லையே நம்மிடம்
பார்த்து பார்த்து செய்கிறாளே அவளை ஏன் கவனிக்க தவறுகிறோம்??
உலகை காட்டியவளையும் மறக்கிறோம்
உயிர் வாழ சுவாசத்தை தருபவளையும் மறக்கிறோமே
இறுதி வரை நம்மை தாங்கும்
பூமியும் தாய்தானே
இனிமேலாவது
அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வோம் தோழர்களே
பசுமை என்னும் கிரீடம் என்றும் அவளை அலங்கரித்து இருக்கட்டும்...