STORYMIRROR

வல்லன் (Vallan)

Romance

3  

வல்லன் (Vallan)

Romance

இரவு நேர காதலர்கள்

இரவு நேர காதலர்கள்

1 min
242

ஓவென்று இரைந்து

பெருநீராய் பெருக்கெடுத்து

ஒரே இரவில் கொட்டித் தீர்த்த

பெருமழையின் பின்னான

அமைதி மிக அந்தரங்கமானது

படபடவென்ற துளிகளின் நிறைவு

சிற்சில நிரல்களின் தொடக்கம்

அந்தச் சாரல் துளிகள்

மௌனமாக நிலமகளுடன்

கூடிக் களித்து

காதல் இரகசியம் பேசியது

இதைப் பொறுக்காத பறவைகள்

பேரமைதியின் சுகத்தைக் குலைக்க

பெருங்குரலெடுத்து இரைந்தன

எவ்வளவு பொறாமை

அந்தக் காதலர்களைக் கண்டு!

அந்தப் பேரமைதியின் நிலைகுலைத்து

பெருங்குரலின் சுரம் ஏற்றி

எள்ளி நகையாடின

அந்த இரவு நேர காதலர்களைக் கண்டு!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance