என்னவன்
என்னவன்
விலகி விலகி சென்றபோதெல்லாம்
வேண்டும் நீ என அணைத்துக்கொண்டான்
தேடுகிறேன் இன்று
காணவில்லை அவனை
துக்கத்திலும் இதம் அளித்தான்
தோல்வியில் தோள் கொடுத்தான்
ஆனந்தத்தில் உறவாடினான்
என்னை எனக்கு உணர்த்தினான்
தவிக்கிறேன் இன்று
காணவில்லை அவனை
காலம் எல்லாம் காத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள்
என்னவன் முகம் பார்ப்பேன் என்று!