STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

4  

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

சொல்ல நினைத்தது

சொல்ல நினைத்தது

1 min
84

ஒற்றைச்சங்கின் ஒலியாக

அலைகளின் ஒலியாக

காற்றினில் கலந்து ஒலித்தது

உன்னோடு நான் சொல்ல நினைத்தது

மெல்லிய மலரிதழ்களில் ரீங்கரிக்கும்

தேனீக்கள் சுமந்திடும் மகரந்த துகள்களாய்

என்னுள் உன்னுடைய நினைவுகள்

நறுமணம் வீசும் மாலைத் தென்றலில்

துவண்டு நான் நிற்கும் போதினில்

கண்களின் பார்வையாக உன் குரலில்

உலகினை நான் காணும் பொழுதுகள்

இரவினையும் பகலாக்கும்

ஆழ்கடலின் ஓசை அதிர்வுகளில்

உதித்தெழும் சூரிய சந்திரனாய்

குளிர்ந்திடும் கிரணங்களாய்

என்னுள் நிறைந்தாய்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance