STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Thriller

5  

Vadamalaisamy Lokanathan

Thriller

விண்வெளி

விண்வெளி

3 mins
480

சத்தியன் விண்வெளி ஆராய்ச்சி தளத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்.ஒரு நாளில் இருபது மணி நேரம் ஆராய்ச்சி மையத்தில் தான் இருப்பார்.

ஆனால் அவரை விரும்பி திருமணம் செய்து கொண்ட ரூபா,ஆரம்பத்தில் கோபபட்டாலும் இப்போது அவரை புரிந்து கொண்டு விட்டாள்.

வீட்டிற்கு வந்தால் அவளது அணைப்பில் தான் தூங்குவார்,ஓய்வு எடுப்பார் எல்லாமே.அதனால் ரூபாவின் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

சத் தியனும் வேறு வழியில்லாமல் அவ்வப்போது அவளுடன் நேரத்தை செலவிட்டு அவளை திருப்தி படுத்தி

கொண்டு இருப்பார்.

ஆரம்பத்தில் இவர் திருமணம் வேண்டாம்,எதிர்காலத்தில் பிரச்சினை வரும்,தனக்கு குடும்பத்துடன் இருக்க நேரம் இருக்காது என்று சொல்லியும் ரூபா கேட்கவில்லை. வலுகட்டயாமாக காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.

அவளுக்கு அவருடைய சொத்தின் மீது அளவு கடந்த ஆசை.அவருக்கு அதை நிர்வகிக்க நேரம் இல்லாத காரணத்தால் அந்த பொறுப்பை அவளிடம் கொடுத்து இருந்தார்.

சில நாட்களில்,அவர் வரும் நேரத்தில் கூட வீட்டில் இருக்க மாட்டாள், கேட்டால் ஏதாவது ஒரு சொத்து பிரச்சனையை சொல்லி அதை யார் கவனிப்பது என்று சமாதான படுத்தி விடுவாள்.

நாள் முழுவதும் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று கவனம் முழுவதும் அதில் இருக்கும் போது மூளை சோர்வடையும் நேரத்தில் அவர் ரூபாவை தேடி வருவார்.வந்து அவள் மடியில் மயங்கி கிடப்பார்.

இன்னும் மூன்று மாதத்தில் மாணவர்கள் தயாரித்த ஒரு விண்கலத்தை வான்வெளிக்கு அனுப்ப வேண்டும்.அதைமட்டும் அனுப்பினால் நிறைய செலவாகும்.அதனால் வேறு நாடுகளில் இருந்து சிறு நவீன விண்கலங்கள் அனுப்ப ஆர்டர் வருகிறதா என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தார்.

ஒரு நாட்டில் இருந்து காலநிலையை கண்காணிக்க,அவசரமாக விண்ணில் ஏவ வேண்டும் என்று துரித படுத்தினார்கள்

இன்னும் ஒரு வாரத்தில் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.


மீண்டும் ஒரு சிக்கல்,அனுப்ப வேண்டிய சிறு ரக விண்கலம் ஒன்று 

தர சோதனையில் வெற்றி பெறவில்லை.அந்த எடையை வைத்து அனுப்பினால் மட்டுமே ராக்கெட் ஏவ முடியும் என்று ஒரு சூழ்நிலை. அவ்வளவு சீக்கிரம் இனி ஒன்று தயார் செய்ய முடியாது.வேறு எந்த நாடும் இப்போது அனுப்ப தயார் இல்லை

இந்த வாரம் அனுப்ப தவறினால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

வீட்டில் வந்து ரூபாவின் அருகே உட்கார்ந்து கொண்டு அழுது புலம்பி கொண்டு இருந்தார்.இது தான் சரியான நேரம் என்று நினைத்து,அவரிடம்,உங்க சக விஞ்ஞானி ரமேஷ் ஏதோ தயார் செய்து வைத்து இருக்கிறார்,அதை அனுப்பலாம் அல்லவா என்று ரமேஷுக்கு வக்காலத்து வாங்கினாள்.

அது இன்னும் சோதித்து கூட பார்க்கவில்லை,அதுவும் அல்லாமல் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டி விடுவார்.வேறு வழி தெரியாது,அவளுடன் ஒரு நல்ல யோசனை தான் முயன்று பார்க்கிறேன் என்று கூறி கொண்டு அவசரமாக ஆராய்ச்சி மையம் சென்று ரமேஷை வர சொன்னார்.

அவரிடம் உள்ள அந்த விண்கலத்தை,வாங்கி, தன் உதவியாளர் வசம் கொடுத்து அது செயல் படாத மாதிரி  சில தொடர்புகளை துண்டிக்க சொல்லி விட்டு அதை ஏவும் ராக்கெட்டில் இணைக்க சொன்னார்.

தன்னுடைய பெயரை கெடுக்க சமயம் பார்த்து கொண்டு இருக்கும் ரமேஷிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்து கடைசி நேரத்தில் அதை அனுப்ப முடிவு செய்தார்.

அதை ராக்கெட்டில் பொறுத்த கொண்டு செல்லும் போது ,சக விஞ்ஞானி ஓடி வந்து,சத்தியன் தயாரித்து இருந்த விண்கலம் தர சோதனையில் வெற்றி பெற்று விட்டது,அதை பொருத்தி அனுப்ப எல்லாம் தயார் என்று சொன்னதும்.அதை கொண்டு வந்தவரிடம் ரமேஷின் விண்கலத்தை நீக்கி விட்டு இதை மாட்டி விட சொன்னார்.யார்க்கும் தெரிய வேண்டாம் என்று கூறி விட்டார்.

ராக்கெட் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.வின் வெளியில் நிறுத்த வேண்டிய வட்ட பாதையில் சரியாக நிறுத்த பட்டது.

அப்போது ரமேஷ் ஏதோ போனில் பேசுவதை ஒருவர் ஒட்டு கேட்டு வந்த சத்தியனிடம் சொல்ல தனக்கு அது பற்றி நல்லா தெரியும், என்று கூறி விட்டார்.

ரமேஷின் விண்கலம் அனுப்பி இருந்தால் இந்நேரம் ராகெட் வெடித்து சுக்கு நூறாகி இருக்கும்.கடைசி நேரத்தில் அதை அனுப்பாமல் பெரும் விபத்து தவிர்க்க பட்டது.

எதிரி நாட்டு விஞ்ஞானி கூட கைகோர்த்து பணம் வாங்கி கொண்டு,ரமேஷ் ராக்கெட் வெடித்து சிதற வழி பார்த்தான்.நல்ல வேலை பெரும் சேதம் தடுக்க பட்டது.

ரமேஷ் கையும் களவுமாக சிக்க போலீஸ் வந்து பிடித்து கொண்டு சென்றது.

சத்தியனுக்கு க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. அவருக்கு தெரிந்து தான் அதை மாட்ட சொன்னார்.

ஆனால் ராக்கெட் புறப்படும் தருணத்தில் புறப்படுவதை தள்ளி போட எண்ணி இருந்தார்.

எப்படியோ எல்லாம் நல்ல படியாக முடிந்தது.

வீட்டிற்கு வந்து மனைவி ரூபா மடியில் படித்து கொண்டு,இனி யாருக்காவது சிபாரிசு செய்வாயா என்று கேட்டு கொண்டு இருந்தார்.

அப்போது தான் அவளுக்கு தன் கணவனின் பெயரை கெடுக்க என்ன என்ன நாடகம் ஆடுகிறார்கள் என்று புரிந்து கொண்டாள்.



Rate this content
Log in

Similar tamil story from Thriller