வாராயோ வெண்ணிலாவே
வாராயோ வெண்ணிலாவே
இன்று எப்படியும் கேட்டு விட வெண்டும் என்ற முடிவோடு வெண்ணிலா வரும் திசை நோக்கி காத்து கொண்டு இருந்தான் அவன்
ஆம்.. தினமும் வெண்ணிலா வரும்போது அதனை பார்த்து ரசிப்பான் ஆனால் பேசியதில்லை.. ஒவ்வொரு நாளும் வெண்ணிலாவை பார்க்கும்பொழுது அவன் முகமானது பொலிவுடன் மிகவும் பிரகாசமாக அழகாக தோன்றும்... ஆனால் சில நாட்களாகவே அவன் முகம் வாடி வதங்கி சிறுத்து காணப்பட்டது...
அவனுக்கு ஒரே குழப்பம்.. என்ன காரணமாக இருக்கும்.. ஏன் சில நாட்களாக முகம் சுருங்கி கொண்டே போகிறது... இன்று எப்படியும் காரணத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்", என்ற முடிவோடு வழக்கமான இடத்தில் வெண்ணிலா வரும் திசை நோக்கி காத்துகொண்டிருந்தான்.
நீண்ட நேரம் கடந்தும் வெண்ணிலா வரவே இல்லை.. காரணம் சில நாட்களாக அவன் பார்த்து கொண்டிருந்தது தேய்பிறை நிலா...
இன்று அமாவாசை...