உழைப்பு உயர்வை தேடி தரும்
உழைப்பு உயர்வை தேடி தரும்
அவள் பெயர் கலைச்செல்வி, எனினும் அவளை படிக்க வைக்க யாரும் இல்லை. அவளின் நிலையை கண்டு ஒரு போதும் அவள் மனம் தவறவில்லை. தாய் தந்தை இருவரையும் விபத்தில் பறிகொடுத்து கலைச்செல்வி தனி மரமாக இருக்கிறாள்.
வருடங்கள் சில ஓடின..
கலைச்செல்வி அரசு காப்பகத்தில் வளர வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவள் தனது படிப்பை தொடர முடிந்தது. அவளின் தந்தை தாயின் கனவு எப்படியாவது கலைச்செல்வியை ஒரு பொறியியல் நிபுணராக உயர செய்ய வேண்டும் என்பது தான். இப்போது அவர்களின் கனவை மெய்யாக செய்ய அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
விட முயற்சி வெற்றியை தரும். இதை உணர்ந்து கலைச்செல்வி மிக கடினமாக படித்தால். அனைத்து தேர்விலும் முதல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றாள்.
பொறியியல் படிப்பில் சேர்ந்து அரசு கல்லூரியில் பயின்றாள். இதிலும் அவள் பெற்றது முதலிடம்.
நாட்டின் மிக பெரிய நிறுவனத்தில் அவளுக்கு பணி நியமனம். முதல் நாள் தொடங்கி அவள் அயராது உழைத்தால். வாழ்வில் முன்னேறுவது ஒன்றே அவளின் லட்சியமாக இருந்தது. தினமும் மணி கணக்காக உழைத்தால், வெற்றி பதை மட்டுமே உன்னதமானது என்று எண்ணினாள்.
ஐந்து வருடங்களுக்கு பிறகு அவளின் அயராது உழைப்பு இன்று அந்த நிறுவனத்தின் தலைமை பொறியியல் நிபுணர் என்ற பதவி அவளிடம் இருகிறது. எத்தணை தடைகள் வந்தாலும், வேதனைகள் வந்தாலும் உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம். உழைத்து அவளின் வாழ்க்கையில் பெரிய உயர் நிலைக்கு சென்றுள்ளது அவளின் சாதனை. பெற்றவர்களின் கனவை மெய் செய்து நல்ல மகளாக நல்ல உழைப்பாளியாக இருக்கும் கலைச்செல்வி ஒரு சாதனை பெண். அவள் உடன் பணிபுரியும் அனைத்து நபர்களையும் உழைக்க உற்சாகம் செய்வாள். அவள் உழைப்புக்கு ஒரு உதாரணம்.
உழைப்பே உயர்வு தரும் என்பதை கலைச்செல்வியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.