மனித நேயம்
மனித நேயம்
ரோட்டோரமாக போகும் வழியில் ஒரு மின் கம்பத்தில், ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது.
அப்படி என்ன தான், அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்து போய் விட்டது. யார் கையிலாவது கிடைத்தால்,
தயவு செய்து, இந்த விலாசத்தில் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவாக சரியில்லை என்றும் தெளிவாக, முழு விலாசத்துடனும் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில், பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால், ஒரு பழைய கூரை வீடு இருக்கும். அங்கே தான், அந்த கண் தெரியாத அம்மா இருக்கு.
ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு சிறு மழைக்கே கூட தாங்காது. கண்களில் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக, எழுந்திருக்கவே முடியாத ஒரு வயதான அம்மா, என் காலடி சத்தம் கேட்டதுமே, யாருப்பா நீ ?
அம்மா, நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்றே வந்தேன்.
அதைக் கேட்டதும் அந்த அம்மா, அழவே ஆரம்பித்து விட்டார்.
தம்பி ரெண்டு, மூணு நாளா, கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேருக்கு மேல வந்து, இந்த 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சதுன்னு சொல்லி சொல்லியே ஒவ்வொருத்தரா வந்து கொடுத்துக்கிட்டே போறாங்க..
அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கோ. எழுதப் படிக்கவும் தெரியாது. பரவாயில்ல அம்மா, நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து விட்டு திரும்பினேன்.
தம்பி நீ போகும் போது, அந்த மின் கம்பத்தில் இருக்கும், அந்த கடிதத்தே மறக்காமல், கிழித்து போட்டு விடு என்றும் அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் விதவிதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார்.
அந்த கடித்ததை கிழித்து விடு என்று, அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் தானே,கூறிக் கொண்டே இருப்பார்.
ஆனால், யாரும் அப்படி செய்யவே இல்லையே. யாருமே இல்லாமல் அனாதையாக வாழும், ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த
அந்த
*மாண்புமிகு மனித நேய நண்பருக்கு*
மனதால் நன்றி சொல்லிக் கொண்டேன். உதவி செய்யவேண்டும் என்ற மனம் இருந்தாலே, இந்த உலகில் உதவ ஆயிரம் வழிகள் இருக்கு,
மனதில் யோசித்து கொண்டு வரும் போதே, வழியில் ஒருவர் என்னிடமே, அண்ணே இந்த விலாசம் எங்கே இருக்கு என்று சொல்ல முடியுமா ?
கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மாக் கிட்டே கொடுக்கணும். வழி சொல்றீங்களா?
முல்லைக்கு தேர் கொடுத்து,
மயிலுக்கு போர்வை கொடுத்து,
மன்னனுக்கு நீடுடி வாழ நெல்லிக்கனி கொடுத்து.
பார்க்காமலே கொண்ட நட்புக்காக உயிர் கொடுத்தோர் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியிலே...
மனித நேயம் இன்னும் மரித்தே போகவில்லை..
பணத்தாலே விலைக்கு வாங்க முடியாத மனித நேயம்,
நம் இந்திய நாட்டு பாரம்பரியத்துக்கு மட்டுமே உரியது !!!