ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 2
ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 2
இது ஒரு கற்பனை தொடர்கதை.
இந்த கதையை படிக்கும் முன் ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 1 படிக்கவும்.
மணி தன் கல்லாபெட்டியில் உள்ள பணத்தை எண்ணிக்கொண்டிருக்க ஒரு ஆள் ஓடி வந்தான்.
மணி,மணி என அவன் மூச்சு வாங்க கத்த என்ன ஆச்சு என மணி அண்ணன் கேட்க ஒரு ஆள் அங்க கடையில சண்டை போட்டுகிட்டு இருக்காரு அப்பறம் உங்க பெயர் கூட சொன்னாரு.
மணி அண்ணன் அங்கு ஓட ஒரு 25 வயது ஆள் அங்கே நின்று கொண்டிருந்தார்.
தம்பி நீ என மணி அண்ணன் கேட்க,அண்ணன் நீங்க என செந்தில் கேட்க,ஆட்டோகாரன் சார் நீங்க என மணி அண்ணனை கேட்க மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
சார் இந்த ஆளோட ரோதனையா போச்சு சார் மணி அண்ணன் ஹோட்டல் போனும்னு சொன்னான் சரி எங்கே இருக்கு பா அது எனக்கு தெரியாதுனு சொன்னேன்.
எனக்கு வழி தெரியும் போ அப்படினு சொன்னான் சார்.
சரி அவன் சொன்னபடியே வந்தேன்.
வந்து இறங்கிட்டு 50 ரூபாய் குடுனு சொன்னா 35 தான் தருவேனு சண்டை பிடிக்கிறான் சார் என ஆட்டோகாரன் சொல்ல
மணி செந்திலிடம் தம்பி ஏன் என கேட்க வழி நான்தானே சொன்னேன் அப்படினு செந்தில் சொல்லிவிட்டு கைகளை அவன் முதுகில் கட்டி கொண்டான்.
மணி அண்ணன் அந்த ஆட்டோ காசை ஆட்டோகாரரிடம் கொடுத்து விட்டு செந்திலை கூட்டி கொண்டு நடக்கையில் தம்பி ஊருக்கு புதுசா என கேட்க செந்தில் ஆமாம் என சொல்ல ,தம்பி நான் உனக்கு ஒரு கதை சொல்றேன்னு மணி சொன்னார்.
ஒரு ஆந்தை பகல் அப்ப ஒரு நரி கிட்ட வழி கேட்டுச்சாம்.
அந்த நரி ஆந்தைக்கு வழி சொல்லி கூட்டிட்டு போச்சாம்.
ஆந்தை சேர வேண்டிய இடத்தை சேர்ந்த உடனேயே நரி சொல்லுச்சாம் வழி சொல்லி கழைப்பா இருக்கு ரொம்ப பசிக்குது உன்னை கொஞ்சம் சாப்பிடுறேன் அப்படினு சொல்லுச்சுசாம்.
ஆந்தை ஓட உடம்பை நரி ஒரு கடி கடிச்சிட்டு போச்சாம்.
அதே நரிக்கு கண்ணு தெரியாம போச்சாம்.
அது அந்த ஆந்தை கிட்ட வழி கேட்க,ஆந்தை அந்த நரியை சிங்க கூட்டம் இருக்க இடத்தில போய் விட்டுச்சாம்.
இதில் இருந்து என்ன தெரியுது என மணி கேட்க ,செந்தில் யாரையும் நம்ப கூடாது என சொல்ல,மணி அண்ணன் அது இல்லை "நமக்கு ஒன்னு தெரியும் அப்படினா அதை வச்சு அடுத்தவனை ஏமாத்த கூடாது." என சொல்ல புரிஞ்சது அண்ணே என செந்தில் சொல்லிட்டு நடந்தான்.
மணி அண்ணன் ஒரு வீட்டின் முன் நின்று விட்டு அந்த மாடியில் நிற்கும் பெண்னை பார்த்தார்.
மணியை அண்ணன் என அழைப்பது மரியாதை நிமித்தமாக அவர் வயது 30 தான்.
அடுத்த நாள் மணி அண்ணன் செந்திலை பருப்பு வாங்க அனுப்பினார்.
மணி அண்ணன் அவன் பின்னே முருகனை அனுப்பினார்.
கொஞ்ச நேரத்தில் அவர் நினைத்து போல் போன் அழைப்பு வந்தது.
மணி அண்ணே ஒரே அக்கப்போரு இங்க கரீம் பாய் கடையில நம்ம செந்தில்னால,
என்ன ஆச்சு என மணி கேட்க (நாம மணினே சொல்லாம்).
முருகன் ஆரம்பித்தான்
"செந்தில் கரீம் பாய் கடையிலே வந்து 20 பேர் சாப்பிடுற அளவுக்கு சாம்பார் வைக்க பருப்பு நீங்க வாங்க சொன்னதா சொல்லிருக்கான்.
அதுக்கு நம்ம கரீம் பாயும் எவ்வளவுனு கேட்டுருக்காரு,
அதான் சொன்னேன்ல 20 பேர் சாப்பிடுற அளவுக்கு சாம்பார் வைக்க பருப்புனு செந்தில் சொல்ல,
எத்தனை கிலோ என கரீம் பாய் கேட்க,
மளிகை கடை வச்சுருக்குற உனக்கு தெரியாதா என செந்தில் சொல்ல,
ஹோட்டல்ல இருக்க உனக்கு தெரியாதா என கரீம் பாய் சொல்ல"
அட மடார்னு செந்திலை போய் இழுத்துட்டு வராம போன்ல என்கிட்ட கதை சொல்ற,போடா இப்ப பொறவு கடைக்கு வருவில உனக்கு இருக்கு.
மணி அண்ணன் யோசிகக ஆரம்பித்தார்.
இந்த செந்தில் உண்மையிலேயே அப்பாவியா இல்லை நம்ம நிம்மதியை கெடுக்க வந்தவனா.
கரீம் பாயை சமாதானம் படுத்திவிட்டு செந்திலை முருகன் கூட்டிகொண்டு வரும்போது அறிவுரைகள் பல சொன்னான் செந்திலுக்கு.
செந்தில் மனதில் ஒன்று ஓடியது "டேய் மணி,குணா அண்ணன் உன்னை பத்தி எல்லாம் சொல்லிட்டாரு உனக்கு நான் நிம்மதி அப்படிங்கற வார்த்தையை மறக்க வைக்கிறேன்" என சொல்லி மனதிற்குள் சிரித்தான்.
ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 3 என தொடரும்.