saravanan Periannan

Abstract Romance Tragedy

4.5  

saravanan Periannan

Abstract Romance Tragedy

என் மாற்றமே காரணம் ஏமாற்றமே

என் மாற்றமே காரணம் ஏமாற்றமே

2 mins
251


கற்பனை கதை

கல்லூரியில் காலை வேளை விளையாட்டு பயிற்சிகள் செல்ல மறுபுறம் வகுப்புக்கு வரும் மாணவர்கள் நேரம் இருப்பதாலோ என்னமோ நடையில் வேகம் இல்லை.

அங்கு விடுதியில் தங்கி படிக்கும் கவின் தனது மனதில் நேசிக்கும் பெண்ணின் முகத்தை நினைத்தபடி எழுந்தான்.

அந்த பெண்னை பார்க்கும் ஆவலில் படுவேகமாக நம் கவின் கல்லூரிக்கு கிளம்புகிறான்.

கவினும்,அவன் காதலி மனிஷாவும் முதலில் நண்பர்கள்.

கவின் தன் காதலை கூட அவளிடம் சொல்ல தயங்கினான்.

அன்று தைரியமோ அல்லது அவளிடம் வேறு ஒருவன் சொல்லி விடுவானோ என்ற பயமோ நடந்து சென்று கொண்டிருந்த மனிஷாவை நிறுத்தினான்.

தன்னுடைய காதலை இப்படி வெளிபடுத்தினான் "மனிஷா,உன்னை எனக்கு பிடிக்கும்,உன் கூட இருந்தாலே காரணமே இல்லாம சந்தோசம் படுறேன்.

நீ என் காதலை ஏத்துக்கிறது பத்தி நல்லா யோசிச்சு சொல்லு,


நான் உனக்கு ஒரு வாக்கு தரேன்,இந்த விஷயம் நம்மை இரண்டு பேர்க்குள்ள தான் இருக்கும்."

மனிஷா அங்கிருந்து வேகமாக சென்றாள்.அவள் மனம் கவினின் வார்த்தைகளை எண்ணமிட்ட படி இருந்தது.

மனிஷாவிற்கும் கவினை பிடிக்கும்,ஆனால் தன் காதலை கவின் வெளிப்படுத்திய பிறகு மனிஷா மனம் ஏனோ அவன் சொன்னது போல் காரணமின்றி மகிழ்ச்சியுற்றது.

இருவரும் பரஸ்பரம் காதலை தெரிவித்து கொண்டனர்.

இரண்டு மாதங்கள் செல்கிறது.

காதல் எண்ணம் இருவருக்குள்ளும் ஆழமாக சென்று கொண்டே இருந்தது.

மனிஷாவோ கவினிடம் கொண்ட காதல் குறைந்து கொண்டே வந்தது.

மாறாக கவினின் காதல் வரம் பெற்ற அசுரன் போல் பலம் பெற்று உறுதி ஆனது.


மனிஷா தனது வகுப்பில் உள்ள இன்னொரு மாணவனான நிவினை பார்க்க தொடங்கினாள்.

இருவரும் நட்பாக பழக இந்த நட்பு காதலாக மாறியது.

நிவின் கவின் மற்றும் மனிஷா காதலை அறிந்திருந்தாலும் இந்த காதல் அவன் குணத்தையும் மாற்றியது.


மனிஷா கவினை பார்ப்பதை தவிர்த்தாள்,தேவையின்றி சண்டையிட்டாள்,கவினை நோகடித்தாள்.

எந்த உறவிலும் எப்போதும் ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும்,கவின் விட்டுக்கொடுத்து கொண்டிருந்தான்.

எந்த ரகசியமும் நீண்ட நாள் மறைந்து இருப்பதில்லை,அஸ்தமனமாகி உதயமாகும் சூரியன்‌ போல் மேல் எழும்பி விடும்.


கவின் காதுகளை நிவின் மற்றும் மனிஷா காதல் எட்டிய போது அவன் மனதளவில் உடைந்து போனான்.

நேராக இருவரையும் பார்க்க கோபமாக போனான்.இது சினிமா அல்ல,நிஜ வாழ்க்கை இங்கு உறவில் நம்பிக்கை இருக்க வேண்டும்,ஒளிவு மறைவு இருக்க கூடாது,ஒருவேளை இந்த இரண்டில் ஒன்று போனாலும் அந்த உறவை இனி நம்முடன் வைத்துக்கொள்ள கூடாது.

கவின் கண்களில் நீர் வழிந்த படி கூறியது " மனிஷா,நீ பிடிக்கலனா முகத்துக்கு நேரா சொல்லி நம்ம உறவை முடிச்சுருக்கலாமே,ஏன் என் மனசை உடைச்ச.

நிவின் நீயும் தப்பு பண்ணிருக்க,அவளும் தான்.

ஒருத்தராவது வந்து என் புத்திக்கு உரைக்கும் படி சொல்லிருக்கலாமே?

நான் இப்ப சொல்றேன் இனி நீங்க யாரோ? நான் யாரோ? நம்மளோட எல்லா உறவும் முடிஞ்சிருச்சு,எந்த சந்தர்பத்திலும் நான் உங்கள் கிட்ட பேச மாட்டேன்.

நீங்களும் அப்படி இருந்தா நல்லது."

கண்களில் நீர் வழிந்தபடி சென்ற கவின் பிறகு அவன் மனதில் இருந்த காதல்,சந்தித்த ஏமாற்றம் உடன் போராடி மீண்டு கொண்டிருந்தான்.

6 மாதங்கள் கழித்து,

கவின் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்,என் காதலை ஏத்துக்குவீங்களா?

ப்ளீஸ்,நிலா நான் எந்த ரீலேசன்ஸிப்பு மீதும் இன்ட்ரெஸ்டா இல்லை.

புரிஞ்சிக்கோங்க என்று சொல்லிவிட்டு நடந்து சென்றான் கவின்.

ஆம்,அவன் மாறிவிட்டான்,அவன் மனம் இன்னொரு ஏமாற்றத்தை தாங்க தயாராக இல்லை,நிச்சயம் அதில் இருந்து மீண்ட பிறகு ஒரு நல்ல காதலியை சந்திக்க தயாராக இருந்தான் கவின்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract