STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract Action

4  

Vadamalaisamy Lokanathan

Abstract Action

சாகச பெண்

சாகச பெண்

2 mins
318


ஆணுக்கு நிகராக பெண்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை

அனுவிற்க்கு நிறைய இருந்தது.

அவளுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகம்.

படிக்கும் போதே அதை பற்றிய கதை கட்டுரைகளை நிறைய படித்து,பட்டமும் பெற்று,தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானி ஆக வேலைக்கு சேர்ந்து விட்டாள்.

சுமார் பத்து வருடம் ஓடி விட்டது.விண்கலம் ஏவும் ஒவ்வொரு நிகழ்விலும் அவளது பங்களிப்பு நிறைய இருந்தது.எந்த ஒரு புதிய ஆராய்ச்சி துவங்கினாலும் தானே முன் வந்து அதில் தன்னை ஈடுபடுத்தி கொள்வாள்.

அரசாங்க அனுமதியுடன் சக விஞ்ஞானிகளுடன் அமெரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து,அங்குள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று,தனக்கு அறிந்ததை அங்கு

பகிர்ந்து தனக்கு தேவையான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு வருவாள்.

பல நாடுகளும் இக்கட்டான சூழ்நிலைகளில் இவளது உதவியை கேட்டு பெற்றது உண்டு.அந்த அளவிற்கு திறமைசாலி.பிற நாடுகள் இவளை கோடிக்கணக்கான சம்பளம் கொடுத்து அவர்களுக்கு வேண்டி பணி புரிய அந்தந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தார்கள்.ஆனால் அனு தன் உயிர் உள்ளவரை தன் தாய்நாடு இந்தியாவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று உறுதி பூண்டு வேலை செய்து வந்தாள்.

பிற நாடுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு தலைமை ஏற்று அதற்கான ஏற்பாடுகள்,ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் இருந்தாள்.

அவளுக்கு இந்த திட்டம் ஒரு கனவு திட்டம்.இந்த வருடதுடன் அவள் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது.தான் ஓய்வு பெறும் அந்த நாளில் நம் நாட்டில் இருந்து விண்வெளிக்கு மனிதன் பறந்தாக வேண்டும் என்று இரவு பகல் பார்க்காமல் பணியில் ஈடுபட்டு வந்தாள்.

சக விஞ்ஞானிகள் முதல் முறை அனுப்பும் போது ஒரு மிருகத்தை அனுப்பி சோதனை செய்து பார்க்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள்.அனு,நம் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லையா,எல்லையில் நாட்டை காக்க உயிர் தியாகம் செய்ய நிறைய பேர் தயாராக இருக்க,அதே ஆர்வத்துடன் விண்ணில் பறக்க,சிறந்த பயிற்சிகளை முடித்து 

ஐந்து விண்வெளி வீரர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.உயிரை பயணம் வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆர்வத்துடன் இருக்கிராகள்.அந்த நம்பிக்கை போதும்.முதலில் ஒருவரை அனுப்புவோம்,அடுத்த முறை மூவரை அனுப்புவோம் என்று உறுதி பட கூற,அரசாங்கமும் தயங்கி கொண்டு அனுமதி அளித்தது.

June11 தேதி அனுவின் பிறந்த நாள்,அன்றுடன் அவளுடைய சேவைக்கு ஓய்வு கொடுத்து விடுவார்கள்.10 தேதி மாலை ஐந்து மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது.11 தேதி அதி காலை 2.30 மணிக்கு இரண்டு விஞ்ஞானிகளுடன் விண்கலம் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது. மதியத்திற்குமேல் அதை சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.விஞ்ஞானிகள் இருவரும் நலமாக இருப்பதாகவும்

புதிய அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது என்று தகவல் அனுப்பினார்கள்.அதை கட்டுபாட்டில் வைக்கும் தளம் வேறு ஊரில் செயல் பட்டது.எல்லோரையும் ஒருகினைத்து

தன் பணியை கச்சிதமாக முடித்தாள் அனு.

அன்று மாலை அவளுக்கு பிரிவு உபசார விழா இனிதே நடந்தது.அன்று அங்கு வந்து இருந்த நாட்டின் பிரதமரும் அதில் கலந்து கொண்டு,முதன் முறையாக மனிதனை விண்ணிர்க்கு அனுப்பிய பெருமை அனு வையே சாரும் என்று பாராட்டி பத்திரம் வாசித்து கொடுத்து அனுவை பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

அனு ஒரு சாகச பெண் என்று இப்போது எல்லோருக்கும் புரிந்து இருக்கும் அல்லவா.

முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract