வாழும் சொர்க்கம்
வாழும் சொர்க்கம்
பூமியே, நீ சுழலாதிருந்தால்.....
இரவு பகல் ஏது?
பருவகாலங்கள் ஏது?
கண்டங்கள் வேறுபட்டாலும்....
நிலங்கள் வேறுபட்டாலும்....
நிறங்கள் வேறுபட்டாலும்....
வாழும் உயிர்கள் வேறுபட்டாலும்....
வாழ்வின் தேவை ஒன்று தான்!
உண்ண உணவு ....
வாழ ஓர் இடம்!
எத்தனை வளங்களை கொண்டிருந்தாய்!
எத்தனை அழகை பெற்றிருந்தாய்!
சுற்றுலா வந்த பயணியர் கூட்டம்....
சுயநலம் மிக்க மனிதர் கூட்டம்.....
அத்தனையும் பாழாக்கியது!
நித்தம் நித்தம் பாழாக்குது!
இயற்கையாய் நீ தந்ததையெல்லாம்....
செயற்கையாய் மாற்றி...
செயல்களில் புதுமைகள் பல புகுத்தி..... சோலைவனத்தையெல்லாம் பாலைவனமாக்கியது!
இலவசமாய் தந்ததையெல்லாம் காசுக்கு விற்கிறது!
பேராசை கொண்டு திரிகிறது!
தான் மட்டுமே வாழ நினைக்கிறது!
காடு மேட்டை திருத்தி கட்டிடங்கள் ஆக்குகிறது!
விளை நிலத்தை விலைக்கு மாற்றி....
வீடுகளாக்குகிறது!
ஆலைகளையும்..... தொழிற்சாலைகளையும் ....
போக்குவரத்தையும் பெருக்கி.....
காற்றை மாசாக்குகிறது!
உரங்களையும் மருந்துகளையும் கொட்டி மண்ணை மலடாக்குகிறது!
வனங்களை அழித்து மழையை காணாமல் துடிக்கிறது!
ஆறுகளும்.... ஏரிகளும்..... வறண்டு கிடக்கிறது!
காற்றுக்கும்... நீருக்கும்....
அலையாய் அலைந்து திரிகிறது!
அடுத்த சந்ததிக்கு அடுத்தடுத்து கோள்களில் ஆராய்ச்சி பண்ணுகிறது!
கையில் வெண்ணெயை வைத்து கொண்டு ஊரெல்லாம் சுற்றி நெய்யுக்கு அலைகிறது!
உன்னருமை தெரிந்திடாது
விண்ணில் வேறு இடம் தேடுகிறது!
சொர்க்கமே என்றாலும் அது உன்னைப் போல இருக்குமா?
இதை சொன்னால் எங்கே புரியப்போகிறது!
வாழும் சொர்க்கம் நீ! உயிர்களை வாழ்விக்க வேண்டும் நீ!
