தற்கொலை
தற்கொலை
ஆயிரம் கலைகள் உன்னுள் மறைந்திருக்க - ஏன்
தேர்ந்தெடுத்தாய் தற்குலையை..
பிறர் பிழையால் இல்லை - உன் தவறால் முடித்து கொள்ளாதே.. தற்கொலையில்...
வர்ணஜாலமான உன் வாழ்க்கையை, மாயஜாலமாக மறையாதே!!
வண்ணத்து பூச்சியாய் பறந்துவிடு, ஈசலாய் இறக்காதே!!
கோபத்தால், விரக்தியால், துயரத்தால் உயரத்தை தேடாதே!!
சேலையில் மாயித்து கொண்டு, கோழை என்று பெயர் எடுக்காதே!!
கலங்கிய மனதால் விடைபெறாதே , ஐந்து அறிவு விலங்கிடம் பகுத்தறிவில்
தோற்றுவிடாதே....
மானம் இழந்தாய், அவமானம் அடைந்தாய் - ஏன்
உன் தாய்க்கு மீளா துயரம் கொடுத்தாய்..
பிறர் துரோகத்தால் தன்னம்பிக்கை இழக்காதே..
தேடாதே தேடாதே!
கடல் தேடாதே!
மலை உச்சம் தேடி குதிக்காதே!!
தண்டவாளம் இடை நாடாதே!!
விஷம் பருகாதே, சந்தோஷம் தொலைக்காதே!!
சாவிடம் உன் வாழ்க்கையின் சாவியை கொடுத்து விடாதே...
துடிப்புடன் செயல்படு - உன் இதய துடிப்பின் சாவி என்றுமே உன்னிடம்...
எண்ணத்திலும்-எழுத்திலும்
என்றென்றும் தீதா!!!