திடங்கொண்டு போராடு !
திடங்கொண்டு போராடு !
கண்ணீரும் ஒரு பொருட்டல்ல
கவலைகளும் ஒரு பொருட்டல்ல
கட்டிப் போடும் வலிகளும் பொருட்டல்ல
வலிகள் ஏற்படுத்தும் வடுக்களும் பொருட்டல்ல
ஆனால் .....
ஒரு சிறு தவறு கூட பூதாகரமாகும்
பிறரைப் பற்றி கவலையற்ற
இந்த இயந்திர உலகிலே !
விமர்சனங்களை பூதமென பார்ப்பதும்
அதிலே கவனம் கொள்ளாது
தட்டிக் கழித்துச் செல்வதும்
நம் மனதினைப் பொறுத்ததே !
மனதினை திடமாக வைத்திருப்போம்
போராடுவோம் ! வெல்வோம் !