நலம் நலமறிய ஆவல் !
நலம் நலமறிய ஆவல் !
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
நலம் நலமறிய ஆவல் !
கைப்பட எழுதிய கடிதங்கள்
எப்போதும் சுமந்து நிற்கும் -
முதல் வரி ! முத்தான வரி !
கால ஓட்டத்தில்
கடிதம் எழுதவும்
அவசியமற்றுப் போனதோடு
நலம் விசாரிப்புகளும் கூட
அருகித் தான் போய்விட்டன !
பத்து நாள் காத்திருந்து
எண்ணங்களை இணைத்தன
கடிதங்கள் ! இன்று -
பத்து நொடி கூட காத்திருக்க
அவசியமற்றுப் போனாலும்
ஏனோ விலகிக் கிடக்கும் உள்ளங்கள் !